
தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு. இதில் பல ஊடகங்களும்,தனியார் நிறுவனங்களும், கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இவர்களுடைய கருத்துக்கணிப்பு எப்படி என்றால்?கூட்டணி அரசியல் கட்சிகளை வைத்து கருத்து கணிப்பு நடத்தி பார்க்கிறார்கள். இங்கே கூட்டணி கட்சிகளுக்கு, அந்தந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அந்தந்த கட்சி உறுப்பினர்களும்,,நிர்வாகிகளும் அவர்களுடைய குடும்பங்களும் தான் அதிக அளவில் அதற்கு வாக்கு வங்கியாக இருக்கும்.
என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது கடினம். இது கொஞ்சம் புரியாத கருத்து போல் தெரிகிறதா? நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால்?

இப்போது பிஜேபி கூட்டணியில், அதிமுக பாமக,தேமுதிக போன்ற கட்சிகள் போட்டியிடுவதாக ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். இந்தக் கூட்டணி கட்சிகளில் தொகுதி பங்கீடு வரும். இப்போது பாமக 10 தொகுதிகளில் நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம்,தேமுதிக அது ஒரு பத்து தொகுதிகளில் நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம், பிஜேபி,அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது பிஜேபி, அதிமுக இதற்கு விழுகின்ற வாக்குகள்,தேமுதிகவும்,பாமகவும் நிற்கின்ற தொகுதிகளில் நடுநிலை வாக்காளர்கள் வாக்களிப்பது குறைவாக இருக்கும்.
இந்த இடங்களில் எதிர்க்கட்சியான திமுகவின் கூட்டணி வேட்பாளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தால் அவர்தான் ஜெயிப்பார்கள்.

இங்கே அரசியல் கட்சி இரண்டாம் நிலைக்கு தான்,இந்த தேர்தலில் தள்ளப்படும்.
வேட்பாளர் எப்படிப்பட்டவர்? அவருடைய தகுதி என்ன?அவர் சேவை மனப்பான்மை உள்ளவரா? அந்த தொகுதியில் அவருடைய மக்கள் பணி என்ன? இது எல்லாம் கணித்து தான் ஒரு வேட்பாளரின் வெற்றி இருக்கப் போகிறது. இதில் பணத்திற்காக வாக்களிக்கும் மக்களின் ஓட்டுக்களால் வெற்றியோ,தோல்வியோ குறைந்த எண்ணிக்கையில் வர வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்ல,இந்த முறை திமுகவிற்கு எதிரான வாக்குகள் அதிகம் இருக்கிறது. அது பணத்தை நம்பி தான் இந்த தேர்தலை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. அடுத்தது பொய்யான பிரச்சாரங்களை நம்பி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. அதற்கு அடுத்தது ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை நம்பியும், தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இறுதியாக திமுகவின் நிர்வாகிகள் வாக்காளர்களிடம் கையை,காலை பிடித்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.

இறுதியாக ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 100 ஓட்டாவது கள்ள ஓட்டு போட வேண்டும் என்பது அது தொடர்ந்து வருகின்ற ஒரு செயல் அது இப்போது எப்படி தீர்மானிக்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு அஸ்திரங்களையும் திமுக தேர்தல் களத்தில் பயன்படுத்தும்.இது தவிர,ரவுடி கோஷ்டிகளையும், இறக்குவார்கள்.
மக்கள் அரசியல் கட்சியின் மீதும்,ஆட்சியாளர்கள் மீதும் வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் காலத்தில் நடிகர்களுக்கு ஓட்டு போட்டார் போல்,இப்போது இருக்கிற விஜய்க்கு வாக்களிப்பார்களா?

விஜயகாந்த் போன பிறகு பிரேமலதாவுக்கு என்ன அரசியல் செல்வாக்கு இருக்கிறது?
அதிமுகவில் எம்ஜிஆர்,ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி கட்சியின் நிர்வாகி அவ்வளவுதான் . அவருடைய அரசியல் செல்வாக்கை பார்த்து மக்கள் வாக்களிப்பார்களா? அதிமுகவில் முன்னாள் ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவார்களா?

அதேபோல், திமுகவில் ஊழல் அமைச்சர்கள் ஒருவரும் வெற்றி பெறுவார்களா? அந்த அளவிற்கு மக்கள் ஆட்சியாளர்கள் மீது,அரசியல் கட்சியினர் மீது,வெறுப்படைந்து இருக்கிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளரவில்லை என்று ஊடகங்கள் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறது. அது அரசியல் தெரியாத மக்களிடம், இத்தனை கட்சிகளும் போட்டி, போட்டு வாக்குகளை பிரித்துக் கொண்டால்,யாருக்கு எவ்வளவு சதவீதம் வரும்? என்பது யாருக்குமே தெரியாது.

ஆனால்,அரசியல் தெரிந்த குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பிஜேபிக்கு வாக்கு வங்கியாக உருவாகியுள்ளது. இது பணம் கொடுத்து,இந்த வாக்குகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற வாக்குகள் பணம் கொடுத்தால், யாருக்கு வேண்டுமானாலும்,மாறிக்கொண்டு தான் இருக்கும்.

இதில் டிடிவி தினகரனுக்கு என்று தென் மாவட்டங்களில் சமுதாய வாக்குகள் இருக்கிறது. அதேபோல், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. இது எல்லாம் அவர்களுக்கு ஓட் பேங்க் மாதிரி இருக்கிறது. இதில் பாமகவின் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து விட்டது. கூட்டணியில் நின்றால் கூட ஒரு தொகுதியாவது ஜெயிப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அதிருப்தியில் இந்த சமுதாயம் பாட்டாளி மக்கள் கட்சி மீது இருந்து வருகிறது.
இப்படி அதிருப்த்தியான வாக்குகள் எப்படி வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், பிரியும். அதனால்தான் தமிழ்நாட்டின் அரசியல் ஒரு கணிக்க முடியாத டஃப் அரசியலாக இருப்பதால், அரசியல் கட்சிகள் மக்களின் பல்ஸ் தெரிந்து கொண்டுதான் ஒரு வருடம் இருக்கும் போதே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது.
இதையெல்லாம் அதிமுக,பிஜேபி கூட்டணி அரசியல் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பணம், ஒவ்வொரு வீட்டுக்கும் இதில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் மக்களை சந்தித்து திமுகவின் ஊழலை எடுத்து சொல்லி போட்டு கேட்க போகிறார்கள். இது மட்டும் போதாது. இந்த தேர்தல் மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது. அதனால், நோட்டாக்களின் வாக்குகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு வேட்பாளரும் ஜெயித்த பிறகு,,அவர்கள் தொகுதி பக்கமே வருவதில்லை. தொகுதி மக்களை என்ன?என்றும் கேட்பதில்லை. கட்சிக்காரர்களுக்கு மட்டுமே,இவர்கள் வேலை செய்கிறார்கள்.

வாக்களித்த மக்களுக்கு என்ன?இவர்கள் செய்தார்கள்?செய்கிறார்கள்?இதுதான், இப்போது பெரும்பான்மை மக்களின் அதாவது நடுத்தர மக்களின் கேள்வி? அது மட்டுமல்ல, இன்றைய மாணவர்கள்,மாணவிகள் புதிய வாக்காளர்களாக வரும்போது அவர்கள் அதிமுக,திமுக மாற்றாக பிஜேபிக்கு வாக்களிக்கலாம் அல்லது விஜய் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இதில் விஜயின் அரசியல் இன்னும் மக்களுக்கு புலப்படாத ஒரு அரசியல். அவர் வந்து என்ன செய்தார்? அரசியலில் வந்து என்ன செய்து விடப் போகிறார்? ஆனால், விஜய்க்கு கிருத்துவ வாக்குகள் அதிகமாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், சினிமா ரசிகர்கள் விஜய்க்கு இருக்கக்கூடியவர்களில் ஒரு 50 சதவீதம் அந்த வாக்கும் அவருக்கு விழ வாய்ப்புள்ளது.அப்படி என்றால்,விஜயின் வாக்கு சதவீதம் என்பது 5 ஐந்து முதல் 10 % சதவீதத்திற்குள் தான் இருக்க வாய்ப்பு.
மேலும், ஒவ்வொரு ,அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறும் போது, அது எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? இது தவிர,இந்த முறை ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி! ஆயிரக்கணக்கில் தான் இருக்குமே ஒழிய, அதிக வாக்குகளை பெற்று (இலட்சக்கணக்குகளில்) இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது.

அப்படி என்றால்!இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது யாராலும் கணிக்க முடியாது. தேர்தல் கணிப்புக்காக ஊடகங்களோ, அல்லது தனியார் நிறுவனங்களோ,கேட்கும் கேள்விக்கு,100 பேரில் 50 சதவீதம் கூட உண்மையை சொல்வார்களா? அப்படி சொன்னாலும், வாக்களிப்பது ஒருவருக்காக இருக்கும், பேசுவது வேறு மாதிரியாக கூட இருக்கலாம். இதை வைத்து தேர்தல் கருத்து கணிப்பு சொல்ல முடியாது.
இது தவிர, நாளுக்கு நாள் மக்களின் மனம் மாறக்கூடியது. அதனால், தமிழ்நாட்டின் தேர்தல் கருத்துக்கணிப்பு பொதுமக்களை, அரசியல் கட்சியினரை குழப்பம் வேலை.மேலும்

இந்த முறை திமுக கூட்டணியில் வைகோ, மதிமுக, மற்றும் கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் மிக,மிக சொற்ப எண்ணிக்கையில் கூட ஜெயிப்பார்களா? திமுகவே இரண்டு டிஜிட்டுக்கு மேல் தாண்டாது. அப்படி இருக்கும்போது, கூட்டணி கட்சிகள் எப்படி ஜெயிக்கும்? அதனால்,,தமிழ்நாட்டின் சட்டமன்ற 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது யாராலும் கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு . அப்படி சொல்கிறார்கள் என்றால், உண்மையை சொல்ல முடியாது.