
உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு மேற்படி சொத்தை கடன் வாங்கியவர்கள் மீட்க முடியாது.

இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் வங்கி கடன் கட்ட முடியாமல், தங்களுடைய சொத்தை ஏலத்தில் விட்டதில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்தவுடன், அவர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்ல,கடன் வாங்கியவர்கள் கண்ணீருடன் கதறுகிறார்கள்.

மேலும், இவர்கள் நாலு கோடி வங்கியில் கடன் வாங்குகிறார்கள் என்றால், வட்டியே கிட்டத்தட்ட மூன்றரை கோடிக்கு வட்டி கட்டி இருக்கிறார்கள். அதன் பிறகு, இந்த சொத்தை வங்கி நிர்வாகிகள், வங்கி கடன் கட்டவில்லை என்று ஏலத்தில் விடுகிறார்கள்.

ஏலத்திற்கு வங்கி நிர்வாகிகளே ஏஜெண்டுகளை நியமித்து, 4 கோடி ,5 கோடிக்கு போகக்கூடிய சொத்தை ஒரு கோடி 30 லட்சத்திற்கு அந்த சொத்தை ஏலத்தில் விட்டுவிடுகிறார்கள்.
இதனால், கடன் வாங்கியவர்கள் தன்னுடைய சொத்து குறைந்த தொகையில் ஏலத்திற்கு போனதால் ,அது ஒரு பக்கம் கதறுகிறார்கள். இன்னொரு பக்கம், இந்த வங்கியால் எவ்வளவு பணத்தை, இவ்வளவு உழைப்பை ,நாம் கொடுத்து கடனை கட்டி இருக்கிறோம். அது பற்றி துளி கூட சிந்திக்காத வங்கி நிர்வாகிகள், இந்த சொத்தை ஏலத்தில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.

இப்படி செய்வதால் இந்த வங்கிகளுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் ?இரண்டு பேரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். கந்து வட்டிக்காரனே மேலே என்று சொல்ல வேண்டிய அளவுக்கு இன்றைய வங்கிகள் வந்திருக்கிறது.
இந்த கதறல் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட பல லட்சம் பேர் தங்களுடைய சொத்தை வங்கியில் வைத்து மீட்க முடியாமல் ,கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்கு மேல் இதே நிலைமை என்றால் ,ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கடன் வாங்கியவர்கள் நிலைமை எப்படி இருக்கும்?
இது உண்மையிலே உச்ச நீதிமன்றம் பொது மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகத் தீர்ப்பு தான் என்று கடன் வாங்கியவர்கள் ,கண்ணீருடன் கதறுகிறார்கள் . இப்படி ஒரு தீர்ப்பா? இவ்வளவு பணம் கட்டிருக்கிறோம். உண்மை என்ன !என்று விசாரிக்காமலே, நீதிபதிகள் எங்கோ, ஒரு மூலையில் இருந்து கொண்டு, இப்படி தீர்ப்புகளை சொல்கிறார்களே என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் புலம்பி தவிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இனி வங்கிக்கு சென்று தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து, எந்த ஒரு தொழில் தொடங்க இளைஞர்கள் எப்படி முன்வருவார்கள்? இதனால், நாட்டின் தொழில் வளம் நிச்சயம் பாதிக்கப்படும். மேலும்,எல்லோரும் அடிமையாக வேலைக்கு செல்வதை தவிர, வேறு வழியில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

மேலும், இந்தத் தீர்ப்பை மறுபரிசலினை செய்ய மத்திய அரசின் அரசு வழக்கறிஞர் ,இதற்கு அப்பில் போக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கவர்னரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ,உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசலனை செய்ய மத்திய அரசு வழக்கறிஞர் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பல கோடி மக்களின் கண்ணீரின் புலம்பல்.

இதில் மத்திய அரசு அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுப்பது வருங்கால ஆட்சிக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.