தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் கட்சிக் கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார் .தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்குமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக மக்களுக்கு கட்சிக் கொடியை தெரிவித்துள்ளார். பிறகு, அக்கட்சி கொடியை ஏற்றி பறக்க விட்டது ,அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியினரால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. 

விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .இதுவே, பல அரசியல் கட்சிகளுக்கு விஜய் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பாரா? இவரால் அதிமுக, திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா? அதற்கான தகுதி அவர்களுடைய ரசிகர்களுக்கு இருக்கிறதா? இவர் ரசிகர்களை நம்பி தான் அரசியலில் இறங்குகிறாரா? இல்லை, தமிழக மக்களை நம்பி இறங்குகிறாரா? இவருடைய கொள்கை என்ன? எதை நோக்கி இவருடைய அரசியல் பயணம்? இருக்கப் போகிறது? 

இங்கு ஜாதி கட்சிகளும், மத கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஜய் எந்த கொள்கையை எடுப்பார்? பெரும்பாலும் மக்கள் நலனை சார்ந்த கொள்கையாகத்தான் இருக்கும்  என்பது என்னுடைய வியூகம். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது அவர் பிடித்து ஆர்வத்துடன் வருகிறாரா? அல்லது பிடிக்காமல் வருகிறாரா? அல்லது மத்திய அரசின் நிர்பந்தத்தில் வருகிறாரா? எது எப்படி வந்தாலும், அவரால் நிச்சயம் சிறுபான்மை வாக்குகளை பிரிப்பார். அதில் மாற்றுக்கருத்து இல்லை,அது திமுகவிற்கு முக்கிய அடியாக இருக்கும் ,மேலும், இவர் அம்மா இந்து ,அப்பா கிறிஸ்து இந்த பாகுபாடுகள் இல்லாத ஒரு முடிவை தான் இவர் எடுப்பார் என்பது தெளிவான ஒன்று .

மேலும், இவர் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் .அதை இல்லை என்று மறுக்க முடியாது. இவர் மட்டுமல்ல, இவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும், அந்த நம்பிக்கை உண்டு .விஜய் நடித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் அரசியலுக்கு வருவார் என்று முதல் அறிக்கை விட்டவர் எஸ் ஏ சந்திரசேகர். அப்போது இவருடைய ஜாதகத்தை கணித்தவர்கள், இந்த காலகட்டத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை கணித்திருக்கிறார்கள். இங்கே, தமிழ்நாட்டில் சில முக்கிய ஜோதிடர்கள் மூன்று ஜாதகங்களை கை காட்டுகிறார்கள்.

அதில் விஜய், அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் இந்த மூன்று பேர் ஜாதகங்கள் அரசியலில் முதல்வர் பதவிக்கு போட்டி போடக்கூடிய ஜாதகங்கள் என்று கணித்திருக்கிறார்கள் .இதில் யாருக்கு? எந்த நேரம்? வலுவாக வேலை செய்கிறதோ அந்த நேரத்தில் அவர்கள் முதல்வராக இருப்பார்கள்.அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வராக பொறுப்பேற்கிறார். இதுவும் தற்போது நடக்கின்ற ஒன்று. மேலும்,இதை கணித்து சொல்லக்கூடிய ஜோதிடர்கள் லட்சத்தில் ஒருவராக தான் இருப்பார்கள் .

மேலும், இந்த கட்சி கொடி கூட ஜோதிடர்கள், இவருடைய ராசிக்கு எந்தெந்த கலர் அதிர்ஷ்டம்? என்பதை தேர்வு செய்து தான் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் சின்னம் யானைகள், வாகைப்பூ ,கலர் எல்லாமே ஜோதிடர்கள் இவர் ஜாதகப்படி கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு விஷயம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. அவருக்கு எது வெற்றி தருமோ, அதை தான் அவரவர் பின்பற்றி ஆக வேண்டும். எம்ஜிஆரும் அப்படித்தான் செய்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான் செய்தார். கருணாநிதியும் அப்படி தான் செய்தார். மு க ஸ்டாலினும் அப்படி தான் செய்தார் .இது எதுவும் வெளியில் தெரியாது. ஆனால் செய்வார்கள்.

இப்போது இந்த அரசியல் மூவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்பதுதான் ஜோதிடர்களின் ஆய்வு. அதில் ஒரு சில ஜோதிடர்கள் விஜய் ஆரம்பத்தில் வலுவான எதிர்க்கட்சியாக வந்து, பிறகு ஆட்சியைப் பிடிப்பார் என்கிறார் ஒரு ஜோதிடர். இருக்கட்டும் யார் நல்லது செய்தாலும், அதை மக்கள் வரவேற்கப் போகிறார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. 

மேலும், அரசியல் என்பது ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின்படி யார்? எந்தெந்த காலம்? தமிழ்நாட்டை ஆள வேண்டும்? இந்தியாவை ஆள வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ள விதி .அந்த விதியை யாராலும் மாற்ற முடியாது . யார் ஜெயிக்கப் போகிறார்கள்? யார் தோற்கப் போகிறார்கள்? எல்லாம் தெரிந்த இறைவனுக்கே …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *