
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ,அவர் நீதிமன்றத்தில், நீதி கிடைத்தும் அது இந்துக்களுக்கு கிடைக்காமல், செய்வதில் திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத் தூணில் தான் நீதிமன்றம் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல்முறையீடு செய்வதும் ,2 உயர்மன்ற நீதிபதிகள் அமர்வு ,அவர் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து நீதி வென்றுள்ளது.
இப்படிப்பட்ட தீர்ப்பையும் மதிக்காத திமுக அரசின் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை ஆணையரும், இந்துக்களின் மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வேலையை தொடர்கின்றனர்.

அது மட்டுமல்ல, அவர்கள் நடவடிக்கை ,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25 வது சட்டப்பிரிவு மத சுதந்திர உரிமைகளை அரசியல் செயல்பாட்டில் பறிக்கும் வேலை இது. இப்படிப்பட்ட வேலையை

மற்ற மத வழிபாட்டு உரிமையில், திமுக அரசு இவ்வாறு தலையிடுமா? மேலும், திமுகவின் அல்லக்கை ,எடுப்பு கை, இது எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறது. தவிர, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும்,இந்த சட்டமாவது தெரியுமா?

அதேபோல் ,திமுகவை சுற்றி இருக்கக்கூடிய சுமார் 25 மத அமைப்புகள் ,அதாவது திருமுருகன் காந்தி போல இருப்பவர்கள் எல்லாம் இந்து மதத்தை கேவலப்படுத்தி பேசுற அளவுக்கு இந்து மதம் இருக்கிறது என்று நினைக்கும் போது தான், இதனுடைய பாரம்பரியம் என்ன? இதனுடைய சங்ககால வரலாறு என்ன? ஆன்மீகத்தின் அரிச்சுவடி கூட தெரியாதவன் எல்லாம், இந்த தீபத்தை கொச்சைப்படுத்தும் அளவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ,அவர்களை கேவலப்படுத்தும் வேலையை தொடர்ந்து திமுக அரசு செய்துள்ளது. இதற்கான தண்டனை என்ன? என்பது மக்கள் தான் எப்படியும் பேசும் இந்த கூட்டத்திற்கு சிந்தித்து தீர்ப்பளிக்க வேண்டும் .
மேலும்,ஆந்திராவில் இருக்கக்கூடிய ஒரு துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு இருக்கக்கூடிய ஒரு அனுதாபம், மற்றும் இந்துக்களின் வேதனையை பற்றி சிந்திக்க கூடிய ஒரு நபராக அவர் இருக்கிறார். ஆனால்,

இங்கே இந்துக்களின் உழைப்பை சுரண்டி ,இந்து அறநிலையத்துறை சாப்பிட்டுக் கொண்டு, இந்துக்களுக்கு எதிராக பேசிக் கொண்டு, கொச்சைப்படுத்தி கேவலப்படுத்திக் கொண்டு, இருக்கிறார்கள் என்றால், இந்த மக்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறார்கள்? என்பது தான் எடுத்துக்காட்டு. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றால்!

2026 இல் இந்துக்கள் ஒன்றுபட்டு நம்முடைய போராட்டத்தை, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா?