
திராவிட மாடல் அரசு படிக்காதவனை தான் ஏமாற்றுகிறது என்றால் !படித்தவர்களையும் ஏமாற்றுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டம் .

இவர்களுடைய அறிவிப்பு பெரிதாக இருக்கும் .அது அவர்களுக்கு லாபமாக இருக்குமே ஒழிய, மற்றவர்களுக்கு நஷ்டமாக தான் இருக்கும்.
பாவம் அரசு ஊழியர்கள் நிறைய பேர் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இந்த உண்மை அரசு ஊழியர்களுக்கு தெரியாது. நேற்றே இது ஒரு கண்துடைப்பு ஏற்று தான் எழுதி இருந்தேன். இப்போது இதைப்பற்றி மேலும்,சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போது ,அதாவது 60 வயதில் அவருடைய சம்பளம் ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், அதில் 50% பென்ஷன் அதாவது அவருக்கு ரூபாய் 50,000 பென்ஷன் வாங்குவார்.

இந்த ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர் ,அவருடைய பென்ஷன் திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் சுமாராக சேர்ந்திருக்கும் என்று வைத்துக் கொண்டால், பென்ஷன் வாங்கும் அதிகாரி 66 ஆவது வயதில் இறந்தால் ,அவருக்கு கிடைத்த தொகை ரூபாய் எவ்வளவு ?என்றால் 36 லட்சம்.

இந்த தொகையில் 60% அவரது மனைவிக்கு கொடுப்பதாக திட்டத்தில் அறிவிப்பு. ஒருவேளை மனைவியும் இவருக்கு முன்னோரோ அல்லது பின்வரும் சில ஆண்டுகளிலோ இறந்து விட்டால், அந்த பணம் முழுதும் அரசுக்கு லாபம்.
அதாவது கொடுக்கப்பட்ட பணம் இவருடைய பணத்திலிருந்தே கொடுக்கப்பட்டு, அதுவும் இவருக்கு கிடைக்காமலே செய்து விடுகிறார்கள்.
அது எப்படி என்றால் அரசு ஊழியரின் சம்பளத்திலிருந்து 10% பிடித்தம், இதனுடன் அரசு செலுத்துகின்ற 10% இதற்கு வட்டி 8% என்று கணக்கு போட்டு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, சுமார் அவர்கள் கைக்கு ஒரு கோடி ரூபாய்,இரண்டு கோடி ரூபாய் வரும் என்று ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார்கள். இவர்கள் கைக்கு ஓய்வு பெறும் போது எவ்வளவு வரும் என்பது இன்னும் அரசு தரப்பில் தெளிவாக தெரிவிக்கவில்லை. ஓய்வு பணப் பலன் எவ்வளவு? ஓய்வு பெற்ற பிறகு எந்த முறையில், இந்த ஓய்வு பண பலன்? என்பதை அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை. எப்படியோ அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும் அதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் .அந்த நோக்கம் நிறை வேற்றிவிட்டது. இனியாவது அரசு ஊழியர்கள் இந்த உண்மையை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.மேலும்,
இதில் சங்கங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி, அரசு ஊழியர்களை ஏமாற்றும் திட்டம் தான் இந்த பென்ஷன் திட்டம். அதனால், அரசு ஊழியர்களும் ஆசிரியர் சங்கங்களும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
இதை அரசு ஊழியர்கள் மீண்டும் இந்த திட்டத்தை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளும்படி அனைத்து தரவுகளையும் ,தெரிந்துக் கொண்டு, இந்த ஏமாற்றிலிருந்து தப்பிக்க வழி இருக்குமா? என்பதை ஆய்வு செய்து வெளி வருவது நல்லது.