நாட்டில் இந்து மதத்தில் தான் மூடநம்பிக்கை என்று பேசும் கிறிஸ்தவ முஸ்லிம் மதங்களில் நடப்பது என்ன ?

Uncategorized

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் கிறிஸ்துவ ,முஸ்லிம்கள் அரசியலுக்காக இந்து மதத்தில் பழமையான மூடநம்பிக்கைகள் உள்ளதாக அவ்வப்போது தெரிவிப்பார்கள். அது என்ன என்றால்! சாமி ஆடுவது, கருப்புசாமி, முனீஸ்வரன் அவரவர் குலதெய்வ வழிபாடுகளை செய்யும்போது ,அதை மூட நம்பிக்கையாக கூட தெரிவித்திருக்கிறார்கள். 

இது தவிர, மகாபாரதத்தில் பாஞ்சாலியை அவதூறாக சித்தரித்து இருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டு ,தங்களுடைய மதத்தில் விஞ்ஞானபூர்வமாக கடவுள் இருப்பதை காட்டுவோம் என்று பல பொய்களை சொல்லி, மதமாற்றத்திற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் செய்கின்ற பித்தலாட்டங்கள்.

இதே பித்தலாட்டம் பஞ்சாப் மாநிலம் ,குர்தாஸ் பூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் (வயது 30) உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளனர். அவருடைய உடல்நிலை தேராமல் இருந்து வந்துள்ளது .இது அவர்களுடைய குடும்பத்தினர், இவருக்கு பேய் பிடித்து இருக்கும் என்று நம்பி உள்ளனர். பிறகு, இவரை பாதிரியார் இடம் அழைத்துச் சென்றுள்ளனர். பாதிரியாரும் வேறு சில ஆட்களுடன் வந்து சாமுவேலுக்கு பேயை விரட்டுவதாக இவருடைய மந்திர ஜால வித்தைகளை எல்லாம் காட்டி இருக்கிறார்.

பிறகு, சாமுவேல் மீதுள்ள பேய் விரட்ட பாதிரியாரும், அருகில் இருந்து வரும் சேர்ந்து அடித்துள்ளனர். இந்த நிலையில் சாமுவேல் மயக்கம் அடைந்து சாய்ந்துள்ளார். சாய்ந்தவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை .அதாவது அவருடைய உயிர் போய்விட்டது. இந்த நிலையில் பாதிரியார் அந்த குடும்பத்தினரை சமாதானம் செய்ய வைத்து, சாமு வேலை அடைக்கலம் செய்து விட்டார்கள் .அதாவது வடிவேல் படத்தில் வந்த காமெடி சீன் போலவே இது அரங்கேறியுள்ளது .

மகன் இறந்த வேதனையில், பெற்றோர் சில நாட்கள் கழித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார்கள் .காலதாமதமாக இப் புகார் கொண்டு சென்றதால், ஏன் உடனே வரவில்லை என்று போலீசார் இவர்களை கேட்டுள்ளனர்? இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாதிரியார் மீது விசாரணை தொடர்கிறது. இப்படி மூடநம்பிக்கை என்று இந்து மதத்தை கூறிவரும் பாதிரியார்கள், சர்ச்சுக்குள்ளே வீடுகளை கட்டிக்கொண்டு, அங்கே பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பார்கள். இப்படி எல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது .

அதேபோல் முஸ்லிம்கள், இவை எல்லாம் சிறுபான்மை என்று இவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் கூட, பெரும்பான்மையான இந்துக்களுக்கு இல்லை. இது எல்லாம் 1965 வரை தமிழ்நாட்டில் சரியான முறையில் தான் இருந்தது .திராவிட கட்சிகள் எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதிலிருந்து இந்துக்களையும், இந்து மதத்தையும் கேவலமாக பேசி இவர்களின் ஓட்டுகளை மட்டும் இந்த கட்சிகள் வாங்கி வந்துள்ளனர்.இதற்கு முக்கிய காரணம் பிராமணர்கள். இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கூட தெரியவில்லை. மேலும்,

இங்கே கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுவார்கள். மேடையில் திட்டி பேசுகின்றவர்களும், கோயிலுக்கு போவார்கள், சாமி கும்பிடுவார்கள். அது வேறு, இது வேறு என்பார்கள். எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள் கூட்டமாக இந்துக்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கென்று ஒரு சுயமான சிந்தனை, அறிவு இவை எல்லாமே இந்த நாட்டில் பேசிப், பேசி ஏமாளி ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 அதிலும் திமுக மிகப்பெரிய அறிவு மேதை என்று தன்னை மார் தட்டிக் கொள்வார்கள் . இதையும் இந்த கார்ப்பரேட் முட்டாள் ஊடகங்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் அவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று மக்களிடம் காட்டிக் கொண்டிருப்பார்கள். இதை இன்னும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் ,இந்த இந்துக்கள் .அதனால், இந்து மதத்தில் இல்லாத ஒரு தனி சிறப்பு. நாட்டில் எந்த மதத்திற்கும் இல்லை. இந்து மதத்தில் இருக்கின்ற ஒரு கலாச்சார சிறப்பு அம்சம், நாட்டில் எந்த வேறு மதத்திற்கும் இல்லை.

 உயர்விலும், நேர்மையிலும், சத்தியத்திலும், தர்மத்திலும் சிறந்து விளங்கக்கூடிய ஒரே மதம் இந்து மதம் தான் .தெய்வத்தை நேரடியாக பார்த்தவர்கள் இந்து மதத்தில்! மீதி எல்லாம் இறந்தவர்களை வழிபட்டுக் கொண்டிருக்கிற மதங்கள். இங்கு மட்டும்தான் தெய்வம். அதன் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் ,எல்லாவற்றையும் வகுத்து வாழக்கூடிய ஒரே மதம் இந்து மதம். இதன் அருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்கள், ஒரு பக்கம் சிறுபான்மை மதவாதிகளாலும், மற்றொரு பக்கம் இந்த திராவிட அரசியல் பொய்யர்களாலும் ,தங்களை தாங்களே பெரிய அறிவு மேதையாக பேசிக் கொண்டிருக்கும் கிரிமினல்களிடம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். 

அரசியல் என்பது எதற்கு? என்று தெரியாத மக்களிடம் தான் ஏமாற்ற முடியும். இதையெல்லாம் தெரிந்தவர்களுடன் ஏமாற்ற முடியாது. தேவையில்லாத கருத்துக்களையும், தேவையில்லாத பேச்சுக்களையும், பேசி மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . அரசியலுக்கு எது தேவை? மதமா? அல்லது நேர்மையா? அல்லது எப்படியும் பேசுகின்ற பேச்சா ? அல்லது ஒழுக்கமா? அது இவர்களிடம் மிகப்பெரிய கேள்வி? இதுதான் திராவிட அரசியல். இதுதான் திராவிடம் மாடல்.

 இந்த மாடல் வந்த பிறகுதான், இந்த மக்களுக்கு இந்து மதத்தின் பெருமை தெரியாமல், இந்த முட்டாள்களின் பேச்சை நம்பி, ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் .பழங்கால மன்னர்களின் ஆட்சி வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழனின் வரலாறு கூறும்.

 எப்படியோ இவர்கள் இந்த நாட்டை சீரழிக்க வேண்டும் என்ற ஒரு தலையெழுத்து இருந்திருக்கிறது. அது நடந்து விட்டது. இனியாவது இந்த மக்கள் விழித்துக் கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *