பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறதா? இது ராமதாஸின் குடும்ப சொத்தா? அல்லது சமூக நோக்கத்திற்கானதா? சமூகம் சிந்திக்குமா ?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவிய நோக்கம் என்ன? அதுவாவது இந்த மக்கள் சிந்திப்பார்களா? இல்லை சமுதாயத்தையே தாங்குகிறார் போல் பேசுவதையும், நடிப்பதையும் பார்த்து 40 ஆண்டு காலத்திற்கு மேல் ஏமாந்தது போதாதா?

இனியும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் சமூக நலனுக்காக அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சொந்த நலனுக்காகவும், அவர்களை இந்த சமுதாயத்தை ஏமாற்றி ஓட்டு வாங்கி,தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ள இருப்பார்களே ஒழிய,இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இருக்க மாட்டார்கள்.

இப்படி இந்த இட ஒதுக்கீடை வாங்கிக் கொடுக்காமலே, கொடுத்தது போல் பேசிக்கொண்டு, இந்த சமுதாயத்தையும் இத்தனை ஆண்டு காலம் ஏமாற்றி, வழி நடத்திக் கொண்டு இருக்கிற ஒரு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி. இன்று வரை இதைப்பற்றிய உண்மை தெரியாமல் அன்புமணியும்,ராமதாஸும் இவர்களுடைய குடும்ப சண்டையை அரசியல் ஆக்கி அதை பொதுமக்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படி இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்வார்கள்?

இவர்கள் எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்? என்பது இன்னும் 100 சதவீதம், இந்த சமுதாயத்திற்கு தெரியாது. ஒருவேளை அது சொத்து தகராறா? அல்லது பதவி போட்டியா? ஏதோ வெளியே ஏதோ இந்த பாத்திரம் கையில வர்ற செய்தி எல்லாம் போன் பண்ணு நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் இவர்கள் சொல்வது பேசுவது இந்த நாடக அரசியலையும் நான் நம்ப மாட்டேன். மேலும், ஊரை ஏமாற்றி, இந்த சமுதாயத்தை ஏமாற்றி,பிழைக்கிறவன் எவன் பின்னாடி வேண்டுமானாலும் போறதுக்கு தயார். தவிர,அந்த கட்சியிலே இருப்பவனுக்கும் இந்த உண்மைகள் தெரியாது.

உழைப்பை நம்பி வாழ்பவர்கள் இவர்களை நம்புவதில்லை. அவர்களுடைய காலில் இவர்கள்தான் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.எதற்காக இந்த சமுதாயம் இந்த சமுதாயம் தொடர்ந்து இந்த போலிய அரசியலை பார்த்து ஏமாந்து கொண்டிருக்க வேண்டும்?

மேலும், ஒரு சமுதாயம் அறிவை இழந்து,போலி வேஷத்தில் அரசியல் செய்கிறது என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சி தான். இன்று வரை இந்த ஜனங்கள் திருந்தும் என்று பார்க்கிறேன் இன்றுவரை இவர்கள் திருந்தவில்லை. காரணம் இவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்டஎண்ணங்கள்,பொறாமை,வஞ்சகம்,சூழ்ச்சி,இது எல்லாம் வன்னிய சமுதாயத்தையே அழிக்க இந்த கட்சியினர் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வெளி வேஷம் யாருக்கும் நன்மை தராது.நன்மையும் செய்யாது.

இவர்கள் நன்மை செய்து கொள்ள கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமுதாயத்தில் ஏமாறும் கூட்டம் ஏமாந்து கொண்டிருக்கிறது.விழித்துக் கொண்டவர்கள், இவர்களிடமிருந்து வெளியே வந்து பிழைத்துக் கொண்டார்கள்.

அவர்கள் யார் என்றால், உண்மையாகவே இந்த சமுதாய பற்று உள்ளவர்கள், சமுதாயத்திற்காக சேவை மனப்பான்மை உள்ளவர்கள்,அவர்களெல்லாம் வெளியேறி விட்டார்கள்.மீதி இருப்பவர்கள் யார்?என்பதை சிந்திப்பவர்கள், புரிந்து கொள்ளுங்கள்.

அது உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்?தெரிந்தே தவறு செய்யவும் கூட்டங்கள் இதில் அதிகம். உண்மை கசக்கும்,,கெட்டது இனிக்கும் என்றால்,அப்படிப்பட்ட மக்களை திருத்த முடியாது.அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். அது உங்களை கெட்ட பாதையில் கொண்டு போய், அது எங்கு சேர்க்க வேண்டுமோ,அங்கே சேர்த்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *