
மதவாதத்திற்கு அர்த்தம் தெரியாமல், அரசியலுக்காக மதவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவது சரியா? தவறா? என்பது திருமாவளவனுக்கு தெரியுமா?

மதம் என்பது என்னுடைய கடவுள் வழிபாட்டு முறைதான் மதம். இதில் மதவாதம் மதம் பிடித்தவர்களின் வாதமா? அல்லது அரசியலில் மதத்தை கொண்டு வருவது ஏன்? பிஜேபி அரசியலில் மதத்தை கொண்டு வருகிறதா?
என்னுடைய உரிமை, என்னுடைய கடவுள் வழிபாடு,வழிபாட்டு முறை, எது?என்பது மதம் விளக்குகிறது.இதில் அரசியலுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை மதத்திற்கும்,அரசியலுக்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா ?
இல்லை,இவர் சொல்வதெல்லாம் அரசியல் என்று பேசுகின்ற மேதையா?நன்றாக கவனியுங்கள்.அரசியல் தெரிந்தவர்கள், அரசியலுக்கும்,மதத்திற்கும் என்ன சம்பந்தம்?
நான் ஒரு கடவுள் பக்தன் இல்லை, இருப்பினும், சாமி கும்பிடுகிறேன்,கோயிலுக்கு செல்கிறேன். அரசியலில் பதவி வேண்டும் என்று கோயிலுக்கு சென்று சாமி இடம் கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் வரும்போது,கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டால் திருமாவளவனுக்கு அது மதவாதம் இல்லையா?

ஒருவர் பக்தர்,அவர் இந்து மதத்திலோ அல்லது கிறிஸ்தவ மதத்திலோ அல்லது முஸ்லிம் மதத்திலோ அவருடைய கடவுளை அவர் வழிபடுகிறார். அது,அவருடைய உரிமை.

ஆனால், இங்கே பிஜேபி எப்படி அரசியலில் மதத்தை கொண்டு வருகிறது? மதவாதிகளை கொண்டு வந்து அரசியல் நடத்துகிறார்களா?இல்லை விபூதி,குங்குமம், சந்தனம் பூசுவது மதவாதிகளாக்கி விட்டார்களா?அல்லது இந்துத்துவா? அமைப்பில் இருக்கக் கூடிய சில காவி உடைகளை அணிவதால்,அவர்கள் மதவாதிகளாக ஆகி விட்டார்களா ?
இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு விபூதி பூசுவது,சந்தனம் அணிவது, குங்குமம் அணிவது,அது அவர்களுடைய தெய்வ வழிபாட்டு முறைகள்.அதற்கும்,அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை.
அப்படி பார்த்தால், மன்னர்கள் காலத்தில் விபூதி அணியாத மன்னர்களே இல்லை.குங்குமம் அணியாத மன்னர்களே இல்லை.அதேபோல் ஜமீன்தார்கள் ஆட்சி செய்த காலத்தில் கூட, சிற்றரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் கூட,இந்து மதத்தில் இருந்தவர்கள் குங்குமம், விபூதி,சந்தனம் அணியாமல் இருந்ததில்லை.
அதனால், மதவாதத்திற்கு அர்த்தம் தெரியாத திருமாவளவன், தன்னை அரசியல் தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லை. மேலும் வட இந்தியாவில் ராமர்,விநாயகர் தெய்வத்தை வைத்து மதவாத அரசியல் செய்யும் பாஜக! தமிழக அரசியலில் முருகனை வைத்து அரசியல் செய்வதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
ஏன் நீயும் முருகனை வைத்து அரசியல் செய்ய வேண்டியது தானே, உன்னை யார் தடுத்தது? மக்கள் யாரையும் தடுக்க மாட்டார்கள்.அதனால்,திருமாவளவனும் முருகனை வைத்து அரசியல் செய்யலாம். முருகன் யாரையும் தடுக்க மாட்டார்.முருகன் யாருக்கும் எதிரி அல்ல. முருகனுக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால்,
அசுர கூட்டத்திற்கு மட்டுமே முருகன் எதிரி. ஒருவேளை திருமாவளவன் அசுர கூட்டத்தில் சேர்ந்தவரா? முருகனைப் பார்த்து உங்களுக்கு பயமா?