
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது மிகப்பெரிய மாபியா கும்பல் ! ஆனால், காவல்துறை அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் .
போதைப்பொருள், குட்கா, ச்விங் டுபாக்கோ, போன்ற புகையிலை பொருட்களும் ஒரு சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்துள்ளார் என்ற காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார் அப்போது லாக் அப்பில் இவர் மரணம் அடைந்துள்ளார்.
மேலும்,கன்னியாகுமரி மாவட்டம் ,ஈத்தங்காடு பகுதியில் சேர்ந்த சபரி வர்மன் ஒரு மாற்றுத்திறனாளி. இதற்குப் பின்னால், அரசியல் பின்னணி கொண்டவர்கள் தான் இருக்க வேண்டும்.
தவிர,இந்த மாற்றுத்திறனாளிக்கும், மாபியா கும்பலுக்கும் ரகசிய உறவுகள் இருக்குமா?. ஒருவேளை அவன் உண்மையை சொல்லிவிட்டால், பல பேர் மாட்டுவார்கள் .அதனால், அவனை லா – கப் டெத் நடத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் இவனிடம் 200 கிராம் அளவுக்கு தான் காட்டியிருக்கிறார்கள்.
மேலும்,இந்தப் பிரச்சனை காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்திருக்கும். ஒரு பக்கம், இந்த சம்பவம் எதிர்கட்சிகளால் அரசியலாக்கப் பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் சபரி வர்மன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், அரசு வேலை போன்றவை கொடுத்தும் அவர்கள் ஏற்க முன் வரவில்லை என தகவல் .
தவிர, முக்கியமான குற்றவாளிகளை காவல்துறை எப்போது பிடிப்பார்கள்? தமிழக மக்களின் கேள்வி?
