
தமிழக முதல்வர் விஜய் திமுக ஆட்சியில் போடப்பட்ட அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நெடுஞ்சாலை துறையில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்தது பொதுப் பணித்துறையில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளில் ,நகராட்சி, பேரூராட்சி போன்ற அமைப்புகளில் போடப்பட்ட டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அவை அனைத்தும் இ – டெண்டர்களாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி இணையதளத்தின் மூலம் டெண்டர்கள் போடப்பட்டு யார் தகுதியான நிறுவனம் ?குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் பணியின் உறுதித் தன்மை அடுத்தது குறைந்த கட்டண டெண்டர் போன்றவை கருத்தில் கொண்டு, இனி அனைத்து துறைகளிலும் டெண்டர் விடப்படும்.
மேலும்,அதற்கு தகுதியானவர்கள் கமிஷன் கொடுக்காமல் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யலாம் .இது ஒரு நல்ல திட்டமே தகுதி வாய்ந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
