
நாட்டில் இணையதளம் மற்றும் செல்போன் உபயோகத்தால் ,பல நன்மைகள் இருப்பது போல், ஆபத்துகளும், தீமைகளும், அதில் நிறைந்துள்ளது.
மேலும்,அதில் கை சேர்ந்த இணையவழி மோசடி பேர்வழிகளிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார், இதுவரை 11 ஆயிரம் கோடிகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளது என தகவல்.

தவிர,அப்படி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3718 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கென்று குடிமக்கள் நிதி சார் இணைய வழி மோசடி புகார் என்ற ஒரு இணைய தளத்தை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. (CFCFRMS) இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல,இதில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள் என்ற பேதம் இல்லாமல், நூதன மோசடி மற்றும் விஞ்ஞான மோசடி வழியில், இந்த இணையதள குற்றவாளிகள் இருந்து வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 11 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த பெருமை. இவ்வளவு பெரிய தொகை மீட்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.
எனவே ,பொதுமக்கள் இணையதள மோசடி பேர்வழிகளிடம் இருந்து, தங்களை காப்பாற்றிக் கொண்டு, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
