
தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்!நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
140 கோடி மக்களின் மன உறுதியால் இந்தியாவின் வளர்ச்சி பெருமை பெருகிறது. நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்குகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம்.
மேலும், காடுகளில் இருந்த நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், நாட்டில் நம்மிடையே இருக்கக்கூடிய நக்சல் சிந்தனை ரீதியானவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் .
தவிர,வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள், நக்சல்ஸ் சிந்தனை உள்ளவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த பட வேண்டும்.
அப்போதுதான், இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக விரைந்து முன்னேறும். மேலும், நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் சவால்களை ஒழிப்பது, மாணவர்களும், இளைஞர்களும் ,இணைந்து போராட வேண்டியது அவசியமானது.
