
தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையில், உத்தரபிரதேச அரசுக்கு நடத்துனருக்கான டெண்டர் பணி விடப்பட்டுள்ளது? இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .
மேலும்,தமிழ்நாட்டிலேயே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும்போது, எதற்கு வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து நடத்துனராக போக்குவரத்து துறையில் பணியமர்த்த வேண்டும்?
மேலும்,இது தற்காலிக பணியாக இருந்தாலும் அல்லது காண்ட்ராக்ட் பணியாக இருந்தாலும் நம்முடைய தமிழக மக்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும்.

எனவே,இதை தமிழக அரசு மறு பரிசிலனை செய்து, தமிழக இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்க்கு! வேலையில்லா படித்த இளைஞர் சங்கங்களின் கோரிக்கை.
மேலும், இதற்கு ஒருபுறம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தவிர,தமிழ் தெரியாத வட மாநில தொழிலாளர்களை ,எப்படி நடத்துனராக பணிய அமர்த்துவீர்கள்?
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட மாட்டார்களா ?என்ற கேள்வியும் எழும்போது,போக்குவரத்து துறை நிர்வாகம், தமிழ் தெரிந்த வட மாநில தொழிலாளர்களை தான் பணியில் அமர்த்துகிறோம் என்ற பதிலை தருகிறார்கள். இது தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு அவ பெயரை தான் ஏற்படுத்தும் .
