நகராட்சி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி கட்டுபாடான நிர்வாகத்தை கொடுத்தவர் – நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ்.இரவோடு இரவாக ஊராட்சிகள் நிர்வாக இயக்குனராக மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?

திமுக ஆட்சியில் நல்ல நிர்வாக திறமை உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகளில் பொன்னையாவும் ஒருவர். இவருக்கு முன்னால் நகராட்சி நிர்வாகம் எப்படி இருந்தது? என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் ,மிகப்பெரிய குளறுபடி, அதிக கரப்ஷன், நிர்வாக சீர்கேடு அதிக அளவில் இருந்தது. இவர் வந்த பிறகு இந்த சீர்கேட்டையெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, அதிகாரிகளுக்கு கடிவாளம் போட்டது போல் இருந்தது .இது எல்லாம் இந்த அதிகாரிகளுக்கு ரொம்ப பிடிக்கவில்லை.  ஏனென்றால், அவர்கள் எத்தனை மணிக்கு வந்தாலும், […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளின் கலப்பட அரிசி -நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர் கலைச்செல்வி மோகன்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கலப்பட அரிசி கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அரசு வேக வைத்தாலும், சாதம் ஒரு விதமான பிசுபிசுப்பு தன்மையோடு உள்ளது. மேலும், அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது ,அதில் அரிசியும் மிதக்கிறது. பாதி அரசி பிளாஸ்டிக் அரிசி போன்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இதை சாப்பிடுவதால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும், ஏதாவது நோய் உருவாகுமா என்ற அச்சத்தில் பேசி வருகின்றனர். […]

Continue Reading

சட்டவிரோத கல்குவாரி ,மணல் குவாரி, மலை மண் ,கிரஷர் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், தமிழக அரசே அதை ஏற்று நடத்துமா ?

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் சவுடுமண், மலை மண், ஆற்று மணல், கல்குவாரிகள், போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக அரசு அதை தனியாரிடம் கொடுப்பதை தவிர்த்து, அரசு ஏற்று நடத்த வேண்டும். இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரே வழி ,அரசே விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் பல கோடிகள் அரசு அதிகாரிகளுக்கு ,கைமாறும் லஞ்சம் அரசுக்கு வருவாயாக வரும். இது தவிர, அளவுக்கு அதிகமாக மணல் […]

Continue Reading

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ.

நாட்டில் எத்தனையோ ஊழல்வாதிகள், கிரிமினல்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வீரப்பனுக்கு பொது மன்னிப்பு திமுக ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது. அதனால், காட்சியும் மாறிவிட்டது. வீரப்பனால் ஒரு கிராமமே பிழைத்து இருக்கிறது. வீரப்பனால் பல அரசியல் தலைவர்கள் பணம் பார்த்திருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்று மேகதாது அணை கட்டுவேன் என்று சொல்லக்கூடிய கர்நாடக அரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சொல்வது போல், வீரப்பன் ஒரு கேசட் அனுப்பினால் போதும் அங்கே எந்த அணையும் […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading

கனிம வள குவாரிகளில் விதிமுறை மீறலை தடுக்கவும், கனிம வள கொள்ளையை தடுக்கவும் ஒரே வழி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிம வள அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் சட்ட  நடவடிக்கை தேவை – சமூக ஆர்வலர்கள்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் கனிம வள விதிமுறைகளையும்,கனிம வள கொள்ளையையும் ,தடுக்க ஒரே வழி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, கிரானைட் கொள்ளை ,கிராவல் மண் கொள்ளை, மலை மண் கொள்ளை, மலை கல் கொள்ளை ,இப்படி அனைத்து கனிம வள கொள்ளைகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இவர்கள் மீது நஷ்ட ஈடு மற்றும் ஜெயில் […]

Continue Reading

காவல்துறையில் பொய் வழக்குகள் போடும் காவல் ஆய்வாளர் , உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவல்துறையில் பொய் வழக்கு என்பது சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களிடம் தான் இந்த பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது .அரசியல் செல்வாக்கு ,அதிகார பலம் ,பணக்காரர்கள் சட்டத்தை வளைக்கும் வேலையை காவல் துறையின் உதவியோடு செய்து வருகிற காவல்துறையின் மறைமுக குற்றங்கள். இவர்கள் யார் ஒருவர் மீதும், புகார் கொடுத்தால் புகாரின் பேரில் பணத்திற்காகவோ அல்லது ஆட்சியாளர்கள் ,அதிகார வர்க்கம் சொல்லுகின்ற படி காவல்துறையில், தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இதனால், […]

Continue Reading

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்-கவர்னர் ஆர் என் ரவி. திமுக லீகல் டீம் அது செல்லாது என்கிறது. அது செல்லுமா? செல்லாதா? என்பது இனி நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம்.

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வு துறைகளில் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால், திமுக தரப்பில் உள்ள வழக்கறிஞர்கள் டீம் அது சட்டப்படி செல்லாது என்கிறார்கள். இது தவிர ,அவரை பதவி நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். ஆளுநர் ஆர் என் ரவி அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது .தொடர்ந்து மேலும் பல குற்ற வழக்குகள் […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ வை சிறைபிடித்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும், அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் […]

Continue Reading