குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து எல்லை மீறிய காவலர்… விசாரிக்க சென்ற போலீசாரிக்கும் கொலை மிரட்டல்!

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து தகாத வார்த்தைகளால் பேசிய காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவலாக இருக்க வேண்டிய காவலரே இப்படி குடிபோதையில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துக் கொண்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அத்தாணியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர், […]

Continue Reading

வகுப்பறையில் மயங்கி விழுந்த +1 மாணவி… சிகிச்சையின்போது குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர் . சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை […]

Continue Reading

கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?

தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது . இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு […]

Continue Reading

நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் நவம்பர் 23 க்கு தள்ளிவைப்பு – ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா .

கிராமசபை கூட்டம் நவம்பர் 1ல், நடைபெற இருந்தது. அது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 23 ல் , தள்ளி வைக்கப்பட்டது .இந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பொதுமக்களிடம் […]

Continue Reading

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு பில் தமிழக அரசின் தகவல்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அச்சிடப்பட்ட பில் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏற்கனவே அரக்கோணம் ராமநாதபுரத்தில் ஆய்வுக்காக இருக்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து இதே நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் இனி மது பாட்டல்களை கூடுதல் விலைக்கு விற்க முடியாது .இது மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியா ?.

Continue Reading

ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்கம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, […]

Continue Reading

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும் அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் பணியாளர்கள் நியமனம் .

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பிளஸ் டூ (+2) முடித்திருப்பவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .இதற்கு நேரடி நியமனம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் ,109 காலிப் பணியிடங்கள் இம் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளன.

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று அம்மன் வேடமணிந்து கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். […]

Continue Reading