சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே […]

Continue Reading

பத்திரிகையாளர்கள்! தலைமைச் செயலகத்திற்குள் செல்வதற்கு, காவல்துறை! செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக நடந்து கொள்வது ஏன்? இதை செய்தித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

தலைமைச் செயலகத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்று வருவது காவல்துறையின் செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக இருப்பது ஏன்? மேலும், இது பத்திரிக்கை துறையை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. தவிர ,கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் மீண்டும் தொடருகிறதா ? தலைமைச் செயலகம் மக்களுக்காக இருக்கிறதா? இல்லை, ஆட்சியாளர்களுக்கும், , அதிகாரிகளுக்கும் மட்டுமே, தலைமைச் செயலகம் இருக்கிறதா? மேலும்,மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்வதற்கு தான் தலைமைச் செயலகம். அதேபோல் பத்திரிகையாளர்கள் தங்களுடைய பத்திரிக்கை துறை சம்பந்தமான கோரிக்கைகளை அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், தெரிவிக்க […]

Continue Reading

ராகவா லாரன்ஸ் நடிகராக இருந்தாலும், சமூக சேவை செய்பவர், இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆசிரியர்.

தமிழ்நாட்டில் அரசியலை கேவலப்படுத்தியவர்கள் ,ரவுடிகளும், சுயநலவாதிகளும் ,ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி என்ற ஒரு லேபில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வந்த கூட்டமாகத் தான் அவர்களைப் பார்க்கிறேன். மேலும்,அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் வந்து விட்டு, அரசியல் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து கொண்டு ஜெயித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்தி , அவருடைய ஊழல்களையும், அராஜகங்களையும் நியாயப்படுத்தி, தமிழ்நாட்டின் அரசியலை மிக கேவலமாக கொண்டு சென்றதில், இந்த கார்ப்பரேட் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு […]

Continue Reading

விரைவில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் தேர்தல் அறிக்கையில் ! – தமிழக முதல்வர் விஜய்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் சொன்ன வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூபாய் 4000 ;டிப்ளமா படித்தவர்களுக்கு ரூபாய் 2500 ;இவர்கள் 29 வயதை கடந்த பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு அரசின் உதவித்தொகை விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ,அதற்கு பட்டதாரிகள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் . அது சம்பந்தமான பதிவு ஐடி கார்டு வைத்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading

முதல்வர் விஜய் தனது பிறந்தநாள் விழாவில்! நலத்திட்ட உதவிகள் கொடுப்பதாக தகவல் .

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ,தனது 52 வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் விழாவில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும்,இதை தனது பெரம்பூர் தொகுதியில் ,நடத்தப்பட இருப்பதாகவும் அரசியல் வட்டார தகவல். அதுமட்டுமல்ல, தன்னுடைய தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனு வாங்க இருப்பதாகவும் தகவல் . மேலும்,இந்த நாளில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் அறிவிப்பாரா? என்ற கேள்வி? சமூக நலன் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியலில், இளம் அரசியல் தலைவர்களில் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூவரில் சிறப்பான திறமையான ஆட்சியை கொடுக்கக்கூடிய தகுதி உள்ளவர் யார் ? -அரசியல் ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?

அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]

Continue Reading

பாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .

பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]

Continue Reading

மாரிதாஸ் கைது! மாரிதாஸ் பேசியதற்காக கைதா? அல்லது உண்மையை பேசியதற்காக கைதா? அல்லது அது பொய்யான தகவலா? இதில் ஏன் கைது?

சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது. மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும். தவிர,பொய்யாக […]

Continue Reading

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading