நீதித்துறை மக்களின் கடைசி நம்பிக்கை ! இந்த நம்பிக்கையை நீதிமன்றமும், நீதிபதிகளும் அதிகார வர்க்கத்திற்கும், பணத்திற்கும், அடி பணிந்து விலை போகக்கூடாது – நீதியின் மீது நம்பிக்கை  வைத்து நேசிப்பவர்கள் .

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை! இன்று மக்கள் பிரச்சனைகளுக்கும் ,அரசியல் மற்றும் அரசு பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீதித்துறை இருந்து வருகிறது .இதில் நீதிமன்றம் ஆட்சியாளர்களுக்காக ,அரசியல் கட்சியினருக்காக, அரசு அதிகாரிகளுக்காக, மந்திரிகளுக்காக ,சலுகை காட்டக் கூடாது.  இங்கே சாமானியனம், அதிகார வர்க்கமும், பணக்காரனும், ஏழையும், ஒருவர் தான். நீதி என்பது மனசாட்சியின் கடவுள். அந்த கடவுளை நீதிபதிகள் யாருக்காகவும், அதன் புனிதம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றத்தின் முக்கிய மாண்பு […]

Continue Reading

தமிழ்நாட்டில் போலி அரசியல் கட்சிகளும், போலி அரசியல்வாதிகளும், ஆக்கிரமித்து நடித்துக் கொண்டிருப்பதால், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு தேவையா?  மக்கள் சிந்திப்பார்களா….?

சினிமா நடிகர்கள் சினிமாவில் நடித்து மக்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்கும், நல்ல விஷயங்களை சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து நடிக்க வேண்டாம் .இங்கேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், மேலும் பல நடிகர்கள் தேவையில்லை. மக்களுக்கு தேவை! செயல்படக்கூடிய  நேர்மையான அரசியல் கட்சியினர் தான் தேவை.  ஆனால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேச்சுப்போட்டி நடத்தும் பேட்டியாளர்கள் தேவையில்லை .மக்களுக்கு தேவை செயல்பாடு உடைய அரசியல் கட்சிகள், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள், […]

Continue Reading

அரசியல் கட்சிகளுக்கு தகுதியற்றவர்கள்! தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருப்பதால் அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்றும் நடிப்புத் தொழிலாகி விட்டதா?

சினிமாவில் நடிக்கிறார்கள் . அது நடிப்புத் தொழில்! ஆனால், அரசியலிலும் நடிப்பதை தொழிலாக்கி விட்டார்கள். தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை ,இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் மீது, அரசியல் தெரிந்தவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  எந்த கட்சி அரசியலுக்கு தகுதியான தலைவர்களை நியமித்துள்ளது? எந்த கட்சியில் தகுதியான தலைவர்கள் இருக்கிறார்கள்? எந்த கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இன்று வரை இருந்து வருகிறது. இதில் என்னவென்றால் ,ஒரு விசேஷம் திருடனும், கொள்ளையடிப்பவனும் […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி தான் ஒரே பேச்சு! நாட்டு மக்கள் நலன் தேவையில்லையா ?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி தான் பேச்சு. மேலும், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு?இதனால், எந்தெந்த கட்சிகளுக்கு அரசியல் லாபம் ?எதற்கு மைனஸ், எதற்கு பிளஸ் ,எந்தக் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடலாம்? எந்த கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு செய்திகளை வெளியிடலாம்?  இதனால் நமக்கு என்ன லாபம்? இதைப்பற்றி தான் டிவியில் விவாதம், சோசியல் மீடியாக்களில் விவாதம், சமூக ஊடகங்களில் விவாதம், […]

Continue Reading

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஊழல் மற்றும் ஊழல்வாதிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

இந்தியாவில் உழைக்காமல் சம்பாதிப்பவர்கள், அரசியல் கட்சிகளில் உள்ள ஊழல்வாதிகள். இவர்களுடைய சொத்து கணக்கை பார்த்து மக்கள் பிரமித்து போகிறார்கள். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்த ஜெகத்ரட்சகன் இன்று பல லட்சம் கோடிக்கு சொத்து. அதேபோல், டி ஆர் பாலு, தமிழ்நாட்டின் மற்றொரு அதானி சன் டிவி கலாநிதி, மாறன் தயாநிதி மாறன், ஆ ராசா, கனிமொழி, ஸ்டாலின் குடும்பம் ,இந்தப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் […]

Continue Reading

அக்டோபர் 30 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி இந்த ராகு கேது பெயர்ச்சியால் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் ?

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அது ராகு மீனத்திற்கும், கேது கன்னிற்கும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றத்தால் !  உலக அளவில் அரசியல் மாற்றங்கள் ,போர் பதற்றங்கள், அரசியலில் ஊழல் பேர்வழிகள், இவர்களுக்கெல்லாம் கடும் சவாலாக தான் இருக்க போகிறது. அதுமட்டுமல்ல,  நாட்டில் மக்களின் மனநிலை ஊழலுக்கு, வன்முறைக்கு எதிராக மாறி இருக்கிறது. இன்னும் சில காலங்களில் அரசியல்வாதிகள் திருந்தவில்லை என்றால், சட்டமும், நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை என்றால் !  கடவுள் […]

Continue Reading

தேர்தல் நெருங்கும் வேலையில், அரசியல் தேர்தல் ! வியாபாரத்தை கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தொடங்கி விட்டதா ?

தேர்தல் நெருங்கும் வேலையில்  ! கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு தேர்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு விட்டது .ஒவ்வொரு தேர்தலிலும், இந்த கருத்துக் கணிப்புகள் பொய்யாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் மெஜாரிட்டி என்பது இருக்காது. மேலும், குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் வெற்றி பெற முடியும். இங்கே பிஜேபி கூட்டணி, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்று இந்த கூட்டணிகளை வைத்து கணிக்கும், கணிதம் துல்லியமாக சொல்ல […]

Continue Reading

அமலாக்கத் துறையின் ஐ டி( I T )ரெய்டால், வெளிவந்த ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு அதிர்ச்சியில் பொதுமக்கள் .

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கலைஞருடைய நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை தான் கடைபிடித்து வந்துள்ளார். இவருக்கு அரசியல் ஆலோசகர் யார்? என்று தெரியவில்லை. தவறான வழிகாட்டுதலால், . இன்று திமுக அரசு மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.  ஒரு பக்கம் நிதிச் சுமை, நிதி நெருக்கடி ,மற்றொரு பக்கம் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஐடி ( I T )ரைட். திமுகவிற்கு அமலாக்கத் துறையின் நடவடிக்கை […]

Continue Reading

பத்திரிகைகளின் சுயநலம், அரசியல் கட்சிகளின் சுயநலம், மக்களின் சுயநலம், நீதிமன்றத்தின் சுயநலம், அதிகாரிகளின் சுயநலம் நாடு விளங்குமா ?

இன்றைய கார்ப்பரேட் பெரிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை கொடுக்கிறார்களா?  அல்லது இவர்களுடைய தொலைக்காட்சியிலும், பத்திரிகை இணையதளத்திலும் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த கேள்வி கேட்க வேண்டும்?  எந்த கேள்வி கேட்கக் கூடாது?  என்ற சமூக அக்கறையே இல்லாத இவர்கள் எப்படி பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்? மேலும், அண்ணாமலை பிஜேபியின் மாநில தலைவர் என்ற முறையில் நீங்கள் எல்லாம் பேட்டி எடுக்க செல்கிறீர்கள். அவரை நீங்கள் மாநில தலைவராக  […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மக்கள் நலனுக்காக செயல்பட்டால் மக்கள் ஏன் நீதிமன்ற கதவுகளை தட்டுகிறார்கள் ?

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய காரணம் என்ன? மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இன்று இவர்கள் மக்களுக்கே பிரச்சனையாக இருக்கிறார்கள். மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக பேசிக் கொண்டு செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்ல,  அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ஆளாளுக்கு பல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வாயிலே எவ்வளவு கருத்து வேண்டுமானாலும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இந்த அரசியல் கட்சி சுயநலவாதிகளின் கூட்டத்தைப் […]

Continue Reading