டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி .

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது – பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்ட போது தமிழகத்தின் குருமார்களின் ஆசி பெற்ற நிகழ்ச்சி ! தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் . நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும், பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading

இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் வணிகத்தின் சேவை

இந்திய தபால் துறையில் விளம்பர சேவையை வழங்கும் புதிய பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் மூலம் வணிக நிறுவனங்களின் வியாபார வளர்ச்சி திட்டத்தை இந்திய தபால் துறை கொண்டு வந்துள்ளது இது குறைந்த செலவில் தங்களுடைய வியாபாரத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் புதிய முறை தான் இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவை. மேலும் இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் […]

Continue Reading

ரயில் நிலையங்களில்! உள்ளூர் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள்.

மத்திய அரசு 728 ரயில் நிலையங்களில் தயாரிப்பு விற்பனை நிலையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதன் பயன்பாட்டு நோக்கத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு பக்கம் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் என்றாலும் அது இந்திய மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது சமூக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் இதற்காக மத்திய அரசு ‘உள்ளூர் மக்களுக்கான […]

Continue Reading

என் ஐ ஏ வழக்குகளில் வாதாடிய வழக்கறிஞர்கள் கைது ஏன்?

வழக்கறிஞர்கள் என்ஐஏ வழக்குகளில் கைது செய்யப்பபட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய புலனாய்வு முகமை வழக்குகளில் வழக்கறிஞர்களாக என் முகமது ,அப்பாஸ் ஏ முகமது யூசுப் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களை ஆஜராகி வந்தனர் . இவர்கள் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை .மேலும், வழக்கறிஞர்கள் இருவரையும் NIA எந்த காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளிவரவில்லை. தவிர. […]

Continue Reading

கலாச்சார மையத்தின் பிரதிபலிப்பு தான் ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்ற தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி.

புது டெல்லி உள்ள தேசிய நவீன கலைக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்னும் கண்காட்சியை தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இந்தியாவின் கலைப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமரிடம் ,  கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் பற்றி விளக்கிக் கூறும் வாய்ப்பைப் பெற்றனர். ஜெய்ப்பூர் இல்லத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க குவிமாடத்தில் ஜன சக்தி கண்காட்சியின் அதிவேகத் திட்டக் காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். கலைப்படைப்புகளைப் பார்த்த பிறகு, பிரதமர் ஜன சக்தி கண்காட்சி அட்டவணையில் […]

Continue Reading

CUTN AND DIRECTORATE OF CENSUS OPERATIONS SIGNS MOU FOR SETTING UP WORKSTATION FOR RESEARCH ON SAMPLE MICRO DATA FROM CENSUS

Central University of Tamil Nadu (CUTN) and the Office of Directorate of Census Operations (DCO), Tamil Nadu, Ministry of Home Affairs, Government of India, have signed a memorandum of understanding (MOU) to set up a workstation for research on sample micro data from the census. The workstation will be located at CUTN’s Neelakudi campus in […]

Continue Reading

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளNIA (National investigation agency) மாவட்டம் முழுவதும்கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல், மற்றொரு பக்கம் அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம் ,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் சுதந்திரம், உயிர் பயம், இதை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் இருந்து வருகிறார்கள். இந்த அரசியல் ரவுடிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தி சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், உண்மைகளை தட்டி கேட்பவர்களுக்கு எதிராகவும், மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள். இது தவிர ,நேர்மையான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக இருந்து […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

இன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள்! கல்வியை வியாபார நோக்கமாகி விட்டதால் !கல்வி சந்தைப் பொருளாகி ஒழுக்கம்! சமூகத்தில் கேள்விக்குறியானதா?

கல்வி என்பதற்கு அடையாளமே ஒழுக்கம்! ஒழுக்கம் இல்லாத ஒருவன் படித்தவன் என்று பல பட்டங்களை, அவன் பேருக்கு அருகில் போட்டுக் கொள்வதில் பெருமை இல்லை .அதே போல் படிக்காமலே, இன்றைய அரசியல்வாதிகள் போல், போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதைத்தான் திருவள்ளுவர் – கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று சொல்லி உள்ளார். ஒருவன் கற்றதற்கு அர்த்தமே அதற்கு தகுந்தார் போல் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் அதன் அர்த்தம். ஆனால், இங்கே […]

Continue Reading