
அண்ணாமலை அரசியல்வாதியா? அல்லது youtuber ஆ என்ற சந்தேகம் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது.
காரணம் இவரை மீடியாவில் பேசுவது ,யூடியூபில் பேசுவது , இதுதான் இவருடைய அரசியல். மேலும்,இப்போது புதிதாக இவரே கரூரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பாஜக சார்பில் அறிவித்துவிட்டார்.

அது மட்டுமல்ல, அந்த அளவிற்கு இவர் எந்த பொறுப்பிலும் தற்போது இல்லை என்கின்றனர் பாஜகவினர்.தவிர,பாஜகவில் ,இவரால் பலனடைந்தவர்கள், மட்டும்தான் அண்ணாமலையை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,அண்ணாமலை பிஜேபியில் ,அப்படி என்ன செய்தார் ?என்பது மட்டும் இது வரை தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதை எல்லாம் இவர்களுடைய ஆதரவாளர்கள் பேசுகிறார்கள் .அதுதான் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது யூட்யூபில்.தவிர,
இவர் செய்ததெல்லாம், இந்த youtube ல, மீடியாவில் பேசுவது, இதுதான் அரசியல் என்று அவர்களும், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அதுதான் அரசியல் என்று அண்ணாமலையும் நினைத்துக் கொண்டிருக்கிறார?

மூன்றாண்டுகளுக்கு மேலாக இவர் செய்த அரசியல் ! அதில் தான் இருக்கிறது .அந்த கார்ப்பரேட் மீடியாக்களின் செய்திகளை எடுத்து பார்த்தால் தெரியும்.

மேலும், தற்போது பிஜேபியில் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக இருந்து வருகிறார் .எந்த அறிவிப்பு இருந்தாலும் ,அவர்தான் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும் . இந்த நிலையில்,
இவர் யாரை கேட்டு ,இதை எப்படி உயிரிழந்தவர்களுக்கு தல ஒரு லட்சம் என்று பாஜக சார்பில் அறிவித்து விட்டார் ?என்பது தான், இப்போது பாஜகவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய குழப்பம்.
இது பற்றி தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளதாக தகவல்.