
உங்களுடன் ஸ்டாலின்! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீரர்களா ?
I was shocked to see the advertisement of Tamil Nadu Chief Minister M.K. Stalin. I mean, the title, “With you, Stalin,” is very good. Also,
சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் நீண்ட நாள் கோரிக்கை வெற்றிடமாக உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ?
பத்திரிக்கை துறையில் 25 ஆண்டு காலமாக செய்தியாளராக பணியாற்றி , தற்போது பத்தாண்டுகளாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தை நடத்தி வருகிறேன்.
மேலும், எங்களது பத்திரிக்கைகளுக்கான சலுகை ,விளம்பரங்கள் தொடர்ந்து செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதனிடம் முறையிட்டு வருகிறேன். அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. மேலும்,
இப்போது என்னுடைய பத்திரிகை இணையதளத்திலே, தங்களுடைய விளம்பரத்தை பார்த்தேன். இந்த செய்தி தங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. தவிர,பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகை , தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே, சலுகை, விளம்பரங்கள் கொடுத்து வருகிறீர்கள். அதனால் எங்களைப் போன்ற பத்திரிகைகள் வளர்ச்சி அடைய முடியவில்லை.
மக்களுடைய வரிபணம் குறிப்பிட்ட கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கே போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த செய்தியை வெளியிட்டு வரும் ஒரு பத்திரிக்கையாளனின் மனக்குமுறல். இது தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை நிலைய பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். மேலும், பத்திரிக்கை துறையில்,
காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று ஆழமான கருத்தை தொடர்ந்து மக்களிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டு வரும் ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம். அது மட்டுமல்ல,
இந்தத் துறை இல்லை என்றால், மக்களுக்கு உண்மைகள் சென்றடைவது மிக, மிக கடினம். அதே போல் பத்திரிக்கை நடத்துவது என்பது எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு, மிகப்பெரிய சவால்கள். அது தங்களுக்கும் தெரிந்த ஒன்று தான். இதுவே கலைஞராக இருந்தால் இந்நேரம் இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் சலுகை ,விளம்பரங்கள் கொடுத்திருப்பார். ஏனென்றால் அவர் முதலில் பத்திரிக்கையாளன் பிறகு தான், திரைக்கதை ,வசனம் ,ஆசிரியர். அவருக்கு இந்த பத்திரிக்கை துறையில் உள்ள கடினமான பிரச்சனைகள், சவால்கள் ,போராட்டங்கள் எல்லாம் தெரிந்தவர்.
எனவே,அந்த சவால்களை எதிர் கொண்டு தான் இந்த பத்திரிகையை சமூக நலனுக்காக போராடி நடத்திக் கொண்டிருக்கிறோம். மேலும் இப் பிரச்சனைகள் குறித்து ,இதுவரை, எத்தனையோ கடிதம் ,இணையதளம், மற்றும் பத்திரிக்கை செய்திகள், எல்லாமே செய்தித் துறைக்கு போய் சேர்ந்திருக்கிறது. ஆனால் ,நடவடிக்கை இல்லை.
இருப்பினும், உங்களுடன் ஸ்டாலின் என்ற ஒரு தலைப்பு என்னையும் அது ஈர்த்தது. அதனால் ,உங்களுடன் ஸ்டாலின் ! தமிழக முதல்வரின் கவனம், எங்கள் மீது திரும்புமா? மேலும்,எங்களுடைய பத்திரிக்கை சார்ந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறோம் .ஆனால், அவர்கள் உங்களிடம் கொண்டு சென்றார்களா? என்பது தெரியவில்லை.
தவிர,சர்குலேஷன் என்ற சட்டத்தை வைத்து பத்திரிக்கையை தீர்மானிக்க கூடாது. இது மத்திய அரசிலும் ,மாநில அரசியலும் தொடர்ந்து செய்கின்ற மிகப்பெரிய தவறு. மேலும் சட்டங்கள் களத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டிய ஒன்று. மேலும், சர்குலேஷன் என்பது எல்லா பத்திரிகைகளிலும் விழுந்து விட்ட ஒன்று. இது பத்திரிக்கை சமூகத்திற்கும், மக்களுக்கும் தெரியும் . மேலும் ,இன்று மக்கள் இணையதளத்தை தான் அதிகம் பார்வையிடுகிறார்கள். அதனால் அதையும் சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும்.தவிர,
இப்படிப்பட்ட சட்டங்கள் சாமான்ய பத்திரிகைகளுக்கு எதிரானது. எனவே, சர்குலேஷன் மட்டுமே பத்திரிக்கை என்று பார்க்காமல், மக்களுக்கான செய்திகளை மற்றும் இணையதளத்தின் பார்வையாளர்களை கொண்டும், சர்குலேஷனை அரசு கொண்டுவர வேண்டும் . அது சமூக நலன் பத்திரிகைகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.எனவே,
இந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.