சாலையை சீரமைக்க ஏற்காட்டில் பொதுமக்கள் போராட்டம் .

Uncategorized

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram

ஏற்காட்டில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் நாகலுார் ஊராட்சிக்குட்பட்டு கொளகூர் மலை கிராமம் உள்ளது. இதை சுற்றி தாளூர் காடு, சுரைக்காய் பட்டி, செட்டிப்பட்டி, வீராச்சூர், புளிய மரத்துார், வேப்பாடி, பூமரத்துார் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கணவாய் புதுார் வழியாக ஏற்காடுக்கு சுற்றுலா வரும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மழையால் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. கரடு முரடாக இருக்கும் சாலையை சரி செய்ய வேண்டி நேற்று காலை 8:00 மணிக்கு, 300க்கும் மேற்-பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் கிராமத்தின் வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அந்த சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *