நாட்டில் பார்ட்டிக்கு செல்லும் நண்பர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் என நீளும் பட்டியல் அதிகரித்து நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா ?

உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram

நாட்டில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து இந்த பார்ட்டிக்கு செல்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் வெளி மாவட்டங்களுக்கு சென்று அரை எடுத்து தங்கி பார்ட்டி செய்யும் கலாச்சாரம் சென்னையில் அதிகமாக இருப்பதாக  தெரிவிக்கின்றனர். மேலும்,

போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நண்பர்களுடன், இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு பக்கம் வெளி மாவட்டம் இன்னொரு பக்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள், இதில் ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், பெரிய தொழிலதிபர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வார இறுதி நாட்களில் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது . 

இதே போல், கல்லூரி மாணவ மாணவிகள் கூட்டம் ஹோட்டல்களில் பார்க்குகளில் சந்திப்பதை தாண்டி தற்போது அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது ஆண் நண்பர்களுடன் குளிர்பானத்தில் போதை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளிவருகிறது .மேலும்,

இப்படிப்பட்ட பார்ட்டிகளில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவி கர்ப்பமானதாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர். 

எனவே, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்களா? அல்லது வேறு யாரும் அப்படி செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *