
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கோயில் பணத்தை திருடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இது பற்றி ஆளும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா. லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் ஏழுமலையானுக்கு வந்த நன்கொடை மற்றும் கோயில் உண்டியலில் போடுகின்ற பணத்தை கோயில் நிர்வாகிகள் எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பதை அந்த வீடியோ மூலம் அதை வெளியிட்டுள்ளார்.
பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொண்டால் கூட ,அதைக் கேட்டு வாங்குபவர் ஏழுமலையான். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையான் இடம் திருடினால் அவர் சும்மா விடுவாரா? யாராக இருந்தாலும் தண்டித்து விடுவார். அதுமட்டுமல்ல, திருடிய பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். அது விளங்குமா? மேலும்,
ஏழுமலையான் பக்தர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவருக்கு தினமும் கோடி கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பெருமாளின் பணத்த கோயில் நிர்வாகிகள் கையாடல் செய்தால் ,ஏழுமலையான் நிச்சயம் அவர்களை விட்டு வைக்க மாட்டார் . அதற்குரிய தண்டனையை எந்த விதத்திலயாவது கொடுத்து தான் தீருவார் என்கின்றனர் ஏழுமலையான் பக்தர்கள்.