
தமிழ்நாட்டில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி திமுக . மேலும்,ஊழலிலே, விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்து ,மக்களை ஏமாற்றிய ஒரு கட்சி திமுக.
அப்படிப்பட்ட திமுகவுக்கு திருமாவளவன் சர்டிபிகேட் கொடுத்தால் ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விடுவார்களா ? என்பது தான் மக்களின் கேள்வி? மேலும்,உங்களுக்கு கூட்டணியில் இருந்து வாங்கி சாப்பிட்டது, இன்னும் அது நெஞ்சிலே அந்த ஈரம் இருக்கிறார் போல தெரிகிறது.

அதனால் திமுகவும், தவெகவும், எப்படி இணைந்து செயல்படும்?விஜய் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நீங்கள் பிஜேபியை எதிர்த்து, திமுக ஸ்டாலின் என்ன தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுத்துவிட்டார்?
மேலும்,தேசிய அளவில் கூட தேவையில்லை. நாளையே திமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்தால் அடுத்த கட்டம் என்ன ஆகும் தெரியுமா? தவெக என்ற கட்சியை மக்கள் சுழித்து வைத்து விடுவார்கள். திமுக வேண்டாம் என்று தான், தவெகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதுவாவது தெரியுமஊு
மேலும் ,எந்த நோக்கத்திற்காக திமுகவுடன் கூட்டணி என்பதுதான் மக்களின் கேள்வி? மக்களுக்கா? இல்லை திமுகவுக்கு இல்லை உங்களுக்கா? எதற்காக தமிழக வெற்றி கழகம் திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும்? ஒருவேளை மத்தியில் திமுக ஆட்சியில் இருக்கிறதா?
இல்லை, அது வட மாநிலங்களில் மிகப்பெரிய செல்வாக்கில் இருக்கிறதா? இந்த கேள்விக்கு திருமாவளவன நாள் பதில் சொல்ல முடியாது. விஜய் பள்ளத்தில் தள்ள இவர் போடும் அரசியல் நாடகமா? மேலும்விஜயும் இதை நம்ப மாட்டார். மக்களும் நம்ப மாட்டார்கள்.
