ஈரோடு கிராமப் பகுதி வீடுகளில் கைகுழந்தையுடன் சென்று யாசகம் செய்வது போல் நடித்து திருடும் பெண்கள்.

Uncategorized

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்து, பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.

அப்பகுதியில் பப்பாளி மதிப்பு கூட்டு தொழிற்சாலை நடத்தி வரும் கணேசன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற அவர் மதியம் வீடு திரும்பியபோது அங்கிருந்த கேபிள், வயர், இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருட்களை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் முதலில் இரண்டு பெண்கள் வீடுகளில் சாப்பாடு கேட்பது போல் நடித்து நோட்டமிட்ட பின் மற்றொரு பெண் வீட்டின் கதவைத் திறந்து நுழைந்து அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *