தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்பவன்! எந்தக் கட்சிகளில் இருந்தாலும், அவன் எப்படி சம்பாதித்தாலும், எப்படி கொள்ளையடித்தாலும், அவனை கார்ப்பரேட் மீடியாக்கள் பரிசுத்தமான வராக காட்டிக் கொண்டிருக்க உங்களுக்கு என்ன கவலை ? – ராசாக்களே .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியலில் நேர்மை, ஒழுக்கம், மனசாட்சி எதுவும் தேவையில்லை. கட்சிக்கொடி, ஒயிட் அண்ட் ஒயிட் சர்ட் ,அண்ட் பொய்யை மெய்யாக பேசும் பேச்சுத்திறமை இது இருந்தால் போதும். உங்களை நாங்கள் மக்களிடம் நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருப்போம். இதுதான் எங்களுடைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி திறமை.

அது மட்டுமல்ல, அரசியல் கட்சியானாலும், பத்திரிக்கை வியாபாரம் ஆனாலும், ,பத்திரிகைகளிலும் ,தொலைக்காட்சிகளிலும் எவ்வளவு பொய் வந்தாலும், அவை அத்தனையும் சர்குலேஷன் தான். அதனால் சர்குலேஷன் என்ற விதிமுறை இருக்கும் வரை எங்களுக்கு எல்லாம் கவலை இல்லை .இது தவிர, அது தினசரி, மாதம், வாரம் இப்படி செய்தி துறை பிரித்திருப்பதால், எங்களுக்கு பிரச்சனையே இல்லை .

 அதற்காக தான் ராசா எங்களுக்கு அரசாங்கம் அரசு அடையாள அட்டை, கோடிக்கணக்கில் விளம்பரங்கள், சலுகைகள் கொடுப்பது எதற்கு? உங்களை பரிசுத்தமானவராக மக்களிடம் காட்டிக் கொண்டு இருந்தால்தான், எங்களுக்கு அது கிடைக்கும் .

இல்லையென்றால், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை JSM ஹோட்டல் திறப்பு அழைப்பு விழாவில் ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டுவதற்கு நமது தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 அதேபோல் முஸ்லிம் சமூகத்தின் பெருமையை நிலைநாட்டு அமீர் போன்ற சிறந்த திரைப்பட இயக்குனர்கள் இருக்கும்போது என்ன கவலை? அதுமட்டுமல்ல ,ஓட்டுக்கலுக்காக அதிமுக, திமுக உங்களை நம்பி இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை? கவலையெல்லாம் இந்துக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தான் கவலை. அதிலும்,

 படித்தவர்கள் ,சிந்திப்பவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், சட்ட வல்லுநர்கள் நாட்டின் நீதிபதிகள், நேர்மையான ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மனசாட்சி உள்ள அதிகாரிகள், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு தான் கவலை .

நாட்டு மக்களை மது போதையிலும் ,போதைப்பொருளிலும் மிதக்க வைத்து விட்டால் போதாதா ?அவர்களுக்கு சுயநினைவு இன்றி இருப்பார்கள் . நீங்கள் எப்படி கொள்ளை அடித்தாலும், எப்படி ஆட்சி செய்தாலும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் கவலைப்படாதீர்கள். இப்படி ஒரு சிறப்பான ஆட்சி தமிழக மக்களுக்கு யார் கொடுப்பார்கள் ? மக்கள் சிந்திக்காத வரை இவர்கள் உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் .

God is great.

இறைவன் மிகப் பெரியவன் .

மக்கள் நலனில் மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *