திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கும் ஈடிக்கும் (E D) பயப்பட மாட்டேன், என்று சொன்னவர் சம்பந்தப்பட்ட இவர் நண்பர்களை ஏன்? வெளிநாட்டுக்கு அனுப்பினார்? – பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் திமுக வீர வசனம் பேசுவது புதிதல்ல, இங்கே பேசிவிட்டு டெல்லியில் போய் மோடியிடம் நெடுக்க காலில் விழுவார்கள். விழுந்து பார்ப்பார்கள் நடக்குமா? நடக்காதா? என்று நடக்கவில்லை என்றால், உடனே சிகையை பிடிப்பார்கள். இதுதான் திமுக. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் நான் ஈடிக்கும் பயப்பட மாட்டேன்,மோடிக்கும் பயப்பட மாட்டேன். உன்னை யார் பயப்பட சொன்னது? தப்பு செய்திருக்கிறாய் , அதனுடைய வெளிப்பாடு, மக்களிடம் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கக்கூடிய உதயநிதி அமலாக்க துறை சோதனைக்கு பயம் இல்லை என்றால் உங்களுடைய நண்பர்களை வெளிநாட்டுக்கு எதற்காக அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி?

மேலும், திமுகவிற்கு அதிமுக,பாஜக கூட்டணி மீது தேர்தல் பயம் வந்துள்ளது. அது ஒரு புறம் இருக்க, உதயநிதி பயத்தால் தன்னுடைய நண்பர்களை உடன் அழைத்துச் செல்லாமல் ஏன்? லண்டனுக்கு தப்பி செல்ல வேண்டும்? அது மட்டுமல்ல, பயமில்லை என்றால், அமலாக்கத் துறைக்கு ஏன் ஓடி ஒளியே வேண்டும்?

மேலும்,தமிழ்நாட்டில் பிஜேபி மக்களை சந்திக்கும் அரசியலாக இருக்கும். எல். முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார். அண்ணாமலை தலைவராக இருந்தபோது, என் மண்,என் மக்கள் யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை, தமிழக சட்டப்பேரவைக்கு திரளாக பாஜக எம்எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக இருக்கும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலிடம் பெறுவோம்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அமலக்கத்துறை சோதனைக்காக பிரதமர் மோடியை சந்தித்தார் என்ற விமர்சனம் சோசியல் மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது பற்றி அவரிடம் கேட்டால் இன்னும் தெளிவாக சொல்வார். தவிர, நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதாக தெரிவித்து, பிறகு அதற்கு போகவில்லை என்று பத்திரிகை செய்தி, இப்படி இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஏன்? டெல்லி சென்றார்? என்பதை அவரிடம் கேட்டால் தெளிவாக சொல்வார் என நினைக்கிறேன்.மேலும்,

பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசி உள்ளார். அவர் சந்திப்பு அமலாக்கத்துறை சோதனையின் வெளிப்பாடாகத்தான் அது இருக்க வேண்டும் இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *