
பரந்தூர் விமான நிலையம் அமைக்க திமுக என்ற சட்டமன்றத்திலே விவாத பொருளாக கொண்டு வந்தது. ஆனால் அதை தவெக அரசு நிராகரித்தது. விவாதிக்க நேரம் ஒதுக்கவில்லை.

அதனால், திமுக வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்கள் சொல்வதை அப்படியே செய்தி என்று கார்ப்பரேட் நிறுவனம் மக்களிடம் தெரிவித்துள்ளது.
ஆனால், சமூக நலன் பத்திரிகைகள் அவ்வாறு தெரிவிக்க முடியாது. மக்களுக்கு உண்மை என்ன என்று தெரிவிக்க வேண்டும் அல்லவா? பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய பகுதியில் சுற்றி உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பினாமிகள் பெயரில் வாங்கி வைத்து விட்டார்கள். இதனால் பொருளாதார பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்படும் என்ற பயமுறுத்துகிறார்கள்.

ஏனென்றால் பிற்காலத்தில் இந்த நிலத்தின் மதிப்பு விலை ஏறும், தவிர, இந்த இடத்தில் விமான நிலையம் வந்தால் வியாபார ஸ்தலங்களை உருவாக்கலாம் என்ற நோக்கத்தில் நிலத்தை வாங்கி போட்டது.
அவர்களுடைய திட்டமும், நோக்கமும் நிறைவேறவில்லை. விவசாயிகள் எத்தனை லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், இப்போது இவர்கள் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் அதுதான் அவர்களால் தாங்க முடியவில்லை. இது உண்மை.
இதை தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய் உளவுத்துறை வைத்து ஆய்வு செய்து பார்க்கட்டும், எவ்வளவு பேர் சுற்றி உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு நடந்துள்ளது ?என்பதை கணக்கெடுத்தால் உண்மை மக்களுக்கும், அரசுக்கும் தெரிய வரும் என்பதை சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு இதை வெளிச்சம் போட்டு ,மக்களிடம் காட்டுகிறது.
