
திருச்சியில் நடந்த விசிக கூட்டத்தில் திருமாவளவனுக்கு துணை மதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அங்கே கொடுக்க வேண்டும் என்ற சட்டமா? மேலும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு எம்எல்ஏக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !ஜோசப் விஜய் ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது ,நான்கு எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் கேட்காதா?
மேலும், இந்த ஒரு அமைச்சர் பதவி கொடுத்த, முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதில், துணை முதலமைச்சர் திருமாவளவனுக்கு கொடுத்து விட்டால், ஆட்சியை விரைவில் முடிவு கட்டிவிட வேண்டியதுதான் என்கின்றனர். அரசியல் பார்வையாளர்கள். மேலும், துணை முதலமைச்சரைக் கேட்காமல், எந்த முடிவும் எடுக்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் போலி அரசியல்வாதிகளை போலவே, போலி பத்திரிகை பிம்பத்தில் செயல்படக்கூடிய யூடியூப் சேனல்கள், இணையதள பத்திரிகைகள் ,பத்திரிக்கையின் நோக்கத்தை மறந்து, அரசியல் கட்சியினர் சொந்த நலனுக்காக பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதைதான் செய்தித் துறை இப்படிப்பட்ட பத்திரிகைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
மேலும், பத்திரிக்கை சுதந்திரம் என்பது அரசியல் கட்சியினருக்கான சுதந்திரம் அல்ல ,அது மக்களுக்கான சுதந்திரம் என்பதை பத்திரிகை என்ற பெயரில் ஏமாற்றுக் கூட்டத்திற்கு இந்த பதில் தெரியுமா?
