
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது.

எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.

மேலும்,எங்கேயாவது திமுக ஆட்சி கவிழ்ந்து விட்டது என்று ஒரு பத்திரிகையாளன் தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்கிறான் என்றால் ,அவன் உண்மையான பத்திரிகையாளனாக, இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? பத்திரிகையாளனுக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே, இவர்கள் அரசியல் கட்சியினராக செயல்பட்டு இருக்கிறார்கள். பத்திரிக்கையாளனாக செயல்படவில்லை.
ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிக் கொள்ள கோபாலுக்கு தகுதி இருக்கிறதா? ஒரே ஒரு செய்தி கட்டுரை எழுத இவரால் முடியுமா? யாரோ ஒரு நிருபர் எழுதி இருப்பான். ஒரு பத்திரிக்கையாளர் என்றால் அவன் பத்திரிகையாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து இருப்பான், அவன் தான் பத்திரிகையாளன்.
மேலும்,இந்த நல வாரியம், கடைசி வரைக்கும் பத்திரிக்கையாளர் என்று சொல்வதற்கு, தகுதியற்றவர்களை தான் நல வாரியத்தில் பொறுப்பாளர்களாக சேர்த்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் என்ன சொன்னாலும் அதை செயல்படுத்த மாட்டார்கள்.

ஏனென்றால் அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. அதை வைத்து அவர்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் ,திமுக கட்சியினர் நடத்தக்கூடிய பத்திரிகைகள்,பத்திரிக்கையாளர்கள் போர்வையில், அவர்களுக்காக இந்த நல வாரியம் செயல்பட்டது.மேலும்,
கார்ப்பரேட் பத்திரிகையே !பத்திரிகைகள், கார்ப்பரேட் தொலைக்காட்சியே பத்திரிகையாளர்கள், இப்படி ஒரு குருட்டுத்தனமான எண்ணங்களும், நினைப்பும், பத்திரிக்கை பற்றி தெரியாதவர்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது. மேலும், இதற்கு ஒரு உதாரணமும் சொல்கிறேன். நடந்த சம்பவங்களே இதற்கு சாட்சி.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா இறந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி யின் நான்காண்டு ஆட்சி தொடர்ந்தது. அப்போது ஆட்சியின் எல்லா தவறுகளுக்கும், ஊழலுக்கும் முட்டுக் கொடுத்தது, இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள் தான் .மேலும்,
தேர்தலுக்கு பிறகு ,எடப்பாடி பழனிசாமி தோல்வியிலிருந்து , திமுகவின் ஸ்டாலின் வரை, இவர்களுடைய ஊழலுக்கும் அராஜக ஆட்சிக்கும் முட்டு கொடுத்தது, தாங்கிப் பிடித்தது .இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் தான் . இது பத்திரிக்கை துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை.

மேலும்,சோசியல் மீடியாவிலும், இது பற்றி விமர்சனமும் வந்துள்ளது. இது பற்றி பத்திரிகையாளர் மணி, ஸ்டாலினின் தோல்விக்கு கார்ப்பரேட் பத்திரிகைகளும், முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூக நலன் ஊடகங்களில் மக்களுக்காக , நடுநிலையுடன் பத்திரிக்கை நடத்தி கொண்டிருந்த குறிப்பிட்ட ஊடகங்கள் தொடர்ந்து எந்த ஆட்சி வந்தாலும் ,உண்மைகளை சுட்டிக்காட்டி, போராட்டத்தில் தான், அவர்கள் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

மேலும்,பத்திரிகையின் உரிமைகளை பற்றி எவ்வளவோ செய்திகளை இந்த நல வாரியத்திற்கும், செய்தியை துறைக்கும், தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல், எழுதி அச்சிடப்பட்டு, இணையதளத்தில் வெளியிட்டுள்ள, ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம்.
ஆனால், அதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லாமல், இவர்களுடைய சுயநலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியமாக செயல்பட்டது, மேலும்,

இந்த நல வாரியம் . மத்திய அரசுக்கும் இது பற்றி, எவ்வளவோ செய்திகள் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்களும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
மேலும்,ஒரு நாட்டின் முன்னேற்றம் அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் ,உயர்த்துவது தான் நாட்டின் முன்னேற்றம். ஆனால், பணக்காரனை உயர்த்துவது நாட்டின் முன்னேற்றம் அல்ல.
ஆனால், செய்தித் துறையில் பணக்காரர்கள் பத்திரிக்கையை முன்னேற்றுவது தான் செய்தி துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது கூட தெரியாமல், செய்தித் துறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் ஒரு பத்திரிக்கையின் நிருபருக்குள்ள தகுதி தான் ,இவர்களுக்கு இருக்கிறது . ஒரு சில தினங்களுக்கு முன் ஒரு மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை சந்திக்கும் போது, அவரிடம் பேசினேன். இதற்கெல்லாம் ஜீ.ஓ. போடுவதாக கூடுதல் இயக்குனர் சொன்னார் என்று தெரிவித்தேன்.
அவரும் எந்த ஒரு ஜீ .ஓ.வும் அப்படி வந்ததாக தெரியவில்லை என்றார். அப்படி போட்டால், இப்போது நூறு பத்திரிக்கை வருகிறது என்றால் 200 பத்திரிகையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வரும் சார் என்றார். அவர் சொன்னது தவறு இல்லை. உண்மைதான்.
நான் சொன்னேன் ஒரு மாவட்டத்திற்கு 500 பத்திரிகைகள் கூட வெளிவரட்டும். அதில் பத்திரிகைக்கான தகுதி ஐந்து பத்திரிக்கை கூட தேருமா? என்றேன். செய்திக்கு அர்த்தம் தெரியாது. தகவலுக்கும் அர்த்தம் தெரியாது.

RNI மட்டுமே ஒரு பத்திரிக்கையை தீர்மானிக்கும் கருவியாக எப்படி இருக்க முடியும்? அந்த செய்தியின் தரம், காப்பி அடிக்கப்பட்ட செய்திகளா? உண்மை செய்திகளா? அது ஆட்சியாளர்களுக்கான பத்திரிகையா ?அல்லது மக்களுக்கான பத்திரிகையா?
இதையெல்லாம் வகுப்பு எடுத்தால் வாயைத் தான் பார்ப்பார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதனால்,
சில பேர் பத்திரிகையே நடத்தாமல், வெறும் RNI மட்டுமே பத்திரிக்கை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமும் இருக்கிறது.

இதை விட ஒரு கூட்டம் ,வாட்ஸ் அப், பேஸ்புக்கில் ,காப்பி அடிக்கும் செய்திகளை போட்டு, நானும் பத்திரிகை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சில கூட்டம், ஐ.டி .கார்டு மட்டுமே பத்திரிகை என்று ஒரு கூட்டம் அதை விற்பனை செய்து, பத்திரிக்கை என்று சொல்லி பத்திரிக்கை துறையை கொண்டிருக்கிறார்கள் . எனவே ,
இப்படிப்பட்ட இந்தப் போலி பத்திரிகையின் பிம்பத்தாலும், போலி பத்திரிக்கையாளர்களாலும் பத்திரிக்கை துறை பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல,

தினசரி பத்திரிக்கை என்று பத்திரிகையை ஆச்சடிக்காமலே ,மாதத்திற்கு ஒன்று, வாரத்திற்கு ஒன்று, என்று அச்சடித்து ,கணக்கு காட்டும் இவர்களும், பத்திரிகை என்று சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .
இந்தக் கூட்டங்கள்,ஒவ்வொருவரும், ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு ,அரசியல் கட்சியினர் போல் ஆட்களை சேர்த்து உள்ளார்கள். இதையெல்லாம், ஒவ்வொன்றும் ஆய்வு செய்தால் ,இதில் எத்தனை தேறும்? என்பதே தெரியவில்லை.

மேலும்,இன்று அச்சு ஊடகம் !மக்கள் அதிகம் வாங்கி, விரும்பி படிக்கவில்லை. எல்லோரும் இணையதளம், சோசியல் மீடியா, மற்றும் தொலைக்காட்சி என்று காலத்திற்கு ஏற்ப மக்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், மாறிவிட்டது. அதில் பத்திரிக்கை துறையும் மிக முக்கியமான ஒன்று. இதில் சோசியல் மீடியா ஒரு பக்கம் இருட்டும், இன்னொரு பக்கம் வெளிச்சமும் நிறைந்தது. இதன் மூலம் பொய்யும் அதிகமாக பரப்புகிறார்கள். சில உண்மைகளும் வெளிச்சத்திற்கு வருகிறது. இதை எப்படி பத்திரிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியும்?

அதனால், பத்திரிகையின் இணையதள பத்திரிகைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும். அதற்கான தகுதியுடன் தேர்வு செய்து ,அந்த பத்திரிகைகளுக்கு !சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும் .

மேலும், இது நாள் வரை,போலியான ஆடிட் ரிப்போர்ட் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பத்திரிக்கையும், கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்களை திமுக ஆட்சியில் அனுபவித்து வந்தது.
அப்போதெல்லாம் ,இந்த பத்திரிகைகள் ,அவர்களுடைய ஊழலுக்கு முட்டுக் கொடுத்துதான் இந்த பத்திரிகை தொலைக்காட்சிகள் சமூகத்தை ஏமாற்றி வந்தது.
அப்போதும் ,இந்த ஊழலுக்கு எதிராக போராடி வந்தது ,சமூகநலன் பத்திரிகைகள். அது எத்தனை பத்திரிகைகள்? என்று செய்தித் துறையின் இயக்குனர் வைத்தியநாதனுக்கு மட்டுமே, நன்கு தெரியும் . ஏனென்றால்,
அப்படிப்பட்டவர்கள் இயக்குனரை சந்தித்து மக்கள் அதிகாரம் பத்திரிகை போல் ,தொடர்ந்து இயக்குனரிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்திருப்பார்கள். நேற்று கூட செய்தித்துறை இயக்குனரை சந்தித்து, இது பற்றி பேசும் போது அவர் சொன்னார்.
உங்களுக்காக நான் மூன்று முறை மேகசினுக்கெல்லாம் (magazines) இந்த நல வாரியத்திடம் பேசினேன். அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். என் பேரில் உங்களுக்கு வருத்தம் கூட ,இருக்கும் என்று சொன்னார். சார் உங்களைப் பற்றி எனக்கு தெரியும்.
அதேபோல், அவர்களுடைய அரசியலைப் பற்றியும் தெரியும். அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் செய்திகளைப் பற்றியும் எனக்குத் தெரியும். ஏனென்றால், நான் அங்கும் வேலை செய்தவன் .இங்கும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
இவ்வளவு பிரச்சனைகளுக்குள் பத்திரிக்கைத்துறை இருந்து இதை சரி செய்ய புதிய அரசுக்கு பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய்!
அரசு ஊழியர்களின் நலத்தில் அக்கறை கொண்டு எப்படி இரண்டு சதவீத அகவிலைப்படி ஏற்றுக் கொடுத்தாரோ, அதேபோல், தகுதியான பத்திரிகைகள், தகுதியான பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, சமூக முன்னேற்றத்திற்கும், பத்திரிக்கை துறைக்கும் ,முக்கிய கடமையாற்றுபவர்களுக்கு உரிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மேலும்,அரசியல் கட்சியின் பின் புலத்தில் இதுவரை இயங்கிக் கொண்டிருந்த பத்திரிக்கை, மற்றும் வியாபார நிறுவனங்களாக இருந்து செயல்பட்டு வரும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணடித்தது செய்தி துறையின் மிகப்பெரிய ஒரு மோசடி .
மேலும் ,அதை மாற்றி, மக்களுக்காக செயல்படக்கூடிய பத்திரிகைகளுக்கு! மக்கள் நலனுக்காக, சமூகத்திற்காக நடத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு! மட்டுமே இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுத்து ,பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகை சார்பாக மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையின் கோரிக்கை – ஆசிரியர் .
