பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்!ஆசிரியை பணியிடை நீக்கம். போராட்டத்தை கையில் எடுத்த ஆசிரியர்கள் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலானது. மாணவிகள் பள்ளி சீருடையில் இருக்கின்றனர். அதில் ஒரு மாணவிக்கு மட்டும் புடவை அணிவிப்பதைபோல துப்பாட்டாவைச் சுற்றிவிட்டு, வயிற்றுப் பகுதியிலும் துணியை மறைத்து கர்ப்பிணிபோல நடித்துகாட்டச் செய்கின்றனர். மற்ற மாணவிகள் தாம்பூலத்தில் ஆரத்தி எடுத்து சந்தனம் பூசி, நலங்குவைப்பதைபோல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோவை கவனித்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து மாணவிகளை கவனிக்கத் தவறியதாக கூறி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி என்பவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதனால், மாணவிகள் செய்த தவறுக்கு ஆசிரியை தண்டிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து வகை ஆசிரியர்கள் இன்றுவேலூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவதாக இந்த கூட்டத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *