பாரத படை வீரர்கள் நல அறக்கட்டளை சார்பாக நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் .

Uncategorized

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram

  திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர் 

சந்தைமேட்டில் பாரத படை வீரர்கள் நல அறக்கட்டளை சார்பாக நாட்டின்78வது சுதந்திர தின விழா,சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தலைவர் சுபேதார் மேஜர் C.ஜெயசீலன் தலைமை தாங்கினார், 

கார்கில் போர் வீரர் அவில்தார் R.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார், செயலாளர் அவில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தார், முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் L.சுப்பிரமணி CSD மேனேஜர் & கேப்டன் V தஞ்சையப்பன் CSD மேனேஜர் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்,

 துணை செயலாளர் அவில்தார் ரவி, பொருளாளர் அவில்தார் முருகன் & துணை தலைவர் அவில்தார் கணேசன் ஆகியோர் பரதம், சிலம்பம், கராத்தே & நடனம் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். சிறப்பாக செயலாற்றிய நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கினார்கள். 

ஆசிரியர் சா.சிவன் நன்றியுரையாற்றினார்,  முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மதியம் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *