மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல்.

இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன?

சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

இதில் என்ன தவறு? ஒருவர் வியாபாரமோ, தொழிலோ, அல்லது வேலையோ, செய்பவர்கள்,அவர்களுடைய வருமானத்தில் வரி கட்டுகிறார்கள். இதில் ஏமாற்றுபவர்கள் தான் இதற்கு பயப்பட வேண்டும். ஏமாற்றுபவர்கள் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று அலறுகிறார்களா? அல்லது இவர்களுடைய தனிமனித உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதற்கு?

மேலும், ஒருவருடைய ஈமெயிலில் உள்ள ரகசியங்களை பார்க்கவும், இன்ஸ்டாகிராம்,facebook,போன்றவற்றில் டேட் டாக்களை திருடி அவர்களுடைய அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்துவார்கள் என்று இவர்களுடைய சோசியல் மீடியா கூட்டம்,பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மக்களிடம் ஒரு ஏமாற்று பத்திரிக்கை பிம்பத்தை வைத்து பயமுறுத்துகிறார்கள்.

இவர்கள் இதற்காக பயப்படவில்லை! வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக செய்யக்கூடிய சதி வேலைகளுக்கு,இதன் மூலம் ஆதாரத்தை எடுத்து விட்டால்,நம்மளுடைய நல்லவர்கள் வேஷம் மக்களிடம் கலைந்து விடுமே என்ற பயம்தான் இப்போது ஏற்பட்டுள்ளது. இது தவிர இவர்களுடைய கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் விவரம் வெளியில் தெரிந்து விடும். அதனால்தான் இவர்கள் அலறுகிறார்கள். மேலும் இவர்கள் சொல்லுவது போல்,

இவர்களுடைய சொந்த விஷயங்களை அல்லது அந்தரங்க விஷயங்களை அதை மத்திய அரசு எடுத்து அம்பலப்படுத்துவது எந்த அரசும் அதை செய்யாது. செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

மேலும், இதற்கு நீதிமன்றம் சொல்லுகின்ற கருத்து ஏற்புடையது அல்ல. என் உச்ச நீதிமன்றமாக கூட இருக்கட்டும், நாட்டு மக்களுக்கு,நாட்டுக்கு சேவை மனப்பான்மையுடன் கொடுக்கக்கூடிய வரி ஏய்ப்பை ஏன் இவர்கள் எதிர்க்க வேண்டும்?

மேலும், சைனா, பாகிஸ்தான், துருக்கி,அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் ரகசியமாக அந்த நாடுகளுடன் இவர்களுக்கு என்ன கள்ளத்தொடர்பு? இந்த குட்டு வெளியில் தெரிந்தால், பிஜேபி எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது.

இந்த வசனம்,திரைகதை அடி முட்டாள்களிடம் தான் பேச வேண்டும் அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது. அதை மக்களிடம் உண்மையை வெளிப்படுத்த எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் இருக்கின்றன.

அதனால், இந்த சட்டம் நாட்டு மக்களுக்கு எதிரானது அல்ல., எதிர்க்கட்சிகளும்,எதிர்க்கட்சி சமூக ஊடகங்களும்,பத்திரிகை தொலைக்காட்சிகளும்,சொல்வது போல் இந்த சட்டம் நாட்டு மக்களுக்கு ஆபத்தானது அல்ல.

மேலும், தவறு செய்தவர்கள் பயப்படத் தான் செய்வார்கள்.நாட்டு மக்களுக்கும்,நாட்டுக்கும், எதிராக மறைமுகமாக செய்யக்கூடிய இவர்களின் அரசியல்! நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் போது, அது ஆபத்து என்றுதான் மக்களிடம் சமாளிப்பார்கள்.

அதை தான் இன்றைய எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக,விடுதலை சிறுத்தைகள், திரிணமல் காங்கிரஸ், மதிமுக போன்ற அனைத்து எதிர்கட்சிகளும், இந்த சட்டத்திற்கு எதிராக அலறுகின்றன.

எனவே,எதனால், இவர்களுடைய அலறல் சத்தம் என்பது நாட்டு மக்களுக்கு இப்போது புரிந்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *