ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா .

ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram

பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். 

இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என முழக்கம், திருக்கோவிலை சுற்றி முழங்கியது. கோவிலில் இருந்து புனித தீர்த்தம் வாங்கி செல்ல ஏராளமான பக்தர்கள் முந்தியடித்துச் சென்றனர். பக்தர்களுக்கு எட்டு மணி அளவில் சிறப்பான வழங்கு நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *