
வரும் மே 4 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதால், அதற்கான பயிற்சி அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் சிவஞானம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணையத்தின் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். எப்படி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அது பற்றிய விரிவான பயிற்சிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது.
அதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில், என்னன்ன நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்?
மேலும்,அது பற்றி அதிகாரிகள் வாக்கு எண்ணும் ஒருபுறம் இருந்தாலும், அரசியல் கட்சியினரை வாக்கு எண்ணும் மையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நிறுத்துவது நல்லது.

அதிலும், வெற்றி பெற்றவர்கள் அங்கே உற்சாகத்தில் ஆரவாரம் செய்வது, தோல்வி அடைந்தவர்கள் வேதனையில் இருப்பது, இந்த இரண்டு தரப்புக்கும் ,மோதல்கள் ஏற்படாத வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும்.
அதுமட்டுமல்ல, அன்று தேர்தல் நிலவரம் குறித்து வெளிவரும் தகவலால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில், அதிகளவு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை வைத்திருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் பாதுகாப்பானது.