
திருப்பரங்குன்றம், மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் உத்தரவை, எதிர்த்து, மேல் முறையிட்டு மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி மனுக்கள் ,தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் ,மற்றும் மேலும், பல மனுக்களும்,சேர்த்து போடப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு இந்து மதத்தின் மீது ,கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும், இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

மேலும்,மேற்படி தீர்ப்பு ,தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ,கொடுத்த தரவுகள், மற்றும் அந்த காலத்தில் அதாவது ராஜாக்கள் காலத்தில் இந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது, அதற்கான சான்றுகள், மற்றும் முன்னோர்கள் இந்த தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான சான்றுகள், அத்தனையும், நீதிமன்றத்தின் பார்வையில், கொண்டு செல்லப்பட்டு, மேற்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு ,உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இங்கே இந்து சமய அறநிலையத் துறையே, இந்த வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்தது ,இந்து மதத்திற்கு, இந்து மத உணர்வாளர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய கேவலம்.
ஏனென்றால் !மக்களுடைய காணிக்கைகள் கொண்டு, கோயில் நிர்வாகத்தை நடத்தக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை, இந்துக்களுக்கும் , இந்த மதத்திற்கும் ,எதிராக இந்த வழக்கை தொடர்ந்தது மிகப்பெரிய தவறு.

மேலும்,இந்த தவறை மக்களில் மனசாட்சி உள்ளவர்கள் ,தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், கோயில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபடுபவர்கள், இவர்கள் அனைவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும்,இந்த தவறை மக்களில் மனசாட்சி உள்ளவர்கள் ,தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், கோயில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபடுபவர்கள், இவர்கள் அனைவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்கள் ஓட்டு வாங்கும் போது மட்டும் , காலில் விழாத குறையாக விழுந்து கிடக்கும், திமுக கட்சியினர் ,இந்துக்களின் சாமியும் ,கோயிலும் , இவர்களுக்கு கேலியாகி விட்டதா?

அதனால் தான் ,தற்போது நாடு முழுவதும் உள்ள ஆன்மீக அமைப்புகள், ஒன்று சேர்ந்து ,இந்த கோயில்களில் நடக்கின்ற திமுக அரசின் அராஜகங்களை கண்டித்து, குரல்கள் எழுப்பத் தொடங்கிவிட்டது.
அதன் தொடக்கமாக தென்காசி மாவட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேளையில், முன்னாள் மாவட்ட ஐபிஎஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல், அதற்கான தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இது ஒரு நல்ல முடிவு.
இதன் மூலம் இந்து கோயில்களும், இந்துக்களை எதிர்ப்பவர்களுக்கும், இந்த அமைப்புகள் சரியான பாடம் புகட்ட போகிறது என்பதுதான் இந்த ஒற்றுமையின் நோக்கமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதுமட்டுமல்ல,
இந்தக் கோயில் சொத்துக்களை பட்டா போட்டு விற்கிறார்கள், அபகரித்துக் கொள்கிறார்கள், நீதிமன்றத்தில் இந்த வழக்கை கொண்டு சென்றாலும் ,அதற்கான நீதி கூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம், தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய சிவன் கோயிலின் பல ஆயிரம் கோடி சொத்துக்களை தினமலர் பத்திரிகையின் நிர்வாகி அபகரித்துள்ளதை ஹரிஹரன் என்பவர் வழக்கு தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடந்தி, அதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்கின்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அராஜகங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று.
மேலும்,இனி இந்த அரசியல்வாதிகளோடு, இந்த சமய அறநிலையத்துறை அராஜகம் செய்தால், மேற்படி இந்துக்களின் ஆன்மீக அமைப்புகள் ,களத்தில் நின்று நிச்சயம் இதற்காக போராடும்.

மேலும், இதை ஒரு ஐபிஎஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல், இந்த ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது மிகவும் சிறப்பானது. வரவேற்க வேண்டிய ஒன்று.
இதன் மூலம் கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் ,அராஜக செயல்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பது உறுதி .