
தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.

மேலும்,தேர்தல் வாக்குறுதிகளில் பொய் சொல்லத் தெரியாது. சட்டத்தை ஏமாற்ற தெரியாது. பொது சொத்துக்களை ஏமாற்றி, கொள்ளையடிக்க தெரியாது. குறிப்பாக சொல்லப்போனால், ஊழல் என்றால் என்ன? என்றே தெரியாது. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிர் மாற்றமாக தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

தவிர, இப்போது அரசியலுக்கு வருபவர்கள்,ஊழல் செய்யவும், பொது சொத்துக்களை கொள்ளையடிக்கவும், மக்களின் வரிப்பணத்தை பொய் கணக்கு எழுதி, சொத்துக்களை வாங்கிக் குவிக்கவும், வருகிறார்கள். நேர்மை என்பது கிடையாது. மனசாட்சி என்பது கிடையாது.

அதனால், இவர்களுக்கு ஏற்றார் போல், தேர்தலாணையும் ,சட்டத்தை மாற்ற வேண்டும். இப்போதுள்ள மக்களுக்கு ஏற்றவாறு, சட்டங்களை மாற்ற வில்லை என்றால், எல்லா துறைகளிலும், ஊழல்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.அதனால், போலிகள் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தொடர்ந்து தேர்தலிலும் வெற்றி பெறுகிறார்கள்.
மேலும்,ஊழல் வழக்கு உள்ளவர்களை தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள், குற்ற வழக்கு உள்ளவர்கள், தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும். இவர்கள் தீர்ப்பு வந்து ,தான் நிரபராது என்று, நிரூபிக்கும் வரை நான் தேர்தலில் நிற்பேன். இது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை.
மேலும்,நீதிமன்றம் இந்த வழக்குகளை ஆண்டு கணக்கில் நடத்திக் கொண்டிருக்கும். அதுவரை இவர் வெற்றி பெற்று பதவியில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். பிறகு சட்டத்தை இவர்களுக்கு ஏற்றார் போல், அதிகரித்தை பயன்படுத்தி மாற்றி விடுவார்கள். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் இடம் கொடுப்பது ஏன்? சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.

மேலும், அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு, தேர்தல் ஆணையத்திற்கு பொதுமக்களால் பேசப்படும் செய்திதான் இது. இந்த செய்தி சமூக வலைதளத்திலும், பொதுமக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அது என்ன என்றால்?தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கலின் போது, முதலமைச்சர் ஸ்டாலின், 5 கோடி சொத்து கணக்கை காட்டி இருக்கிறார் .10,000 அவருடைய கையிருப்பு காட்டி இருக்கிறார்.

ஒரு கார் இல்லை, பைக் இல்லை எதுவுமே இல்லை என்று பொய் கணக்கு காட்டி இருக்கிறார் என்று பொதுமக்களுக்குள் பேசுகிறார்கள்.அது, சமூக வலைதளத்திலும், இந்த செய்தி பகிரப்பட்டு வருகிறது. உண்மை மக்களுக்கும் தெரிகிறது.

மேலும் ,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனக்கு 560 கோடி சொத்து உள்ளதாகவும், கையிருப்பு கோடி கணக்கில் இருப்பதாகவும், சொகுசு கார் இருப்பதையும், தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காட்டி இருக்கிறார். மக்களிடம் உண்மையை வெளிப்படையாக சொல்லவில்லை என்றால், இவர்கள் எல்லாம் எப்படி மக்களுக்காக? மக்கள் நலனுக்காக செய்வார்கள்?
மேலும், இந்த மக்களும், அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், அடிமை கூட்டங்களாக எது நடந்தாலும், தனக்கு நடக்கவில்லை. எவனுக்கோ நடக்கிறது என்று ஒவ்வொருவரும், நாட்டில் திமுக ஆட்சியில் நடந்த கொடுமைகளை பற்றி சிந்திக்காமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது நாட்டுக்கும், மக்களுக்கும், உண்மையாக இல்லாமல், சட்டத்தை மதிக்காமல், ஏமாற்றுகிற ஒரு கூட்டமாக தான் திமுகவின் அரசியல், என்பதை இந்த உண்மைகளை படித்து, மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
மேலும், இவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி தலைவனின் நேர்மையை பற்றியும் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். ஒரு நாட்டின் ஆட்சியாளன் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும்? என்பதை பற்றியும் சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் நேர்மையாக வாழ்ந்தால் தான், ஆட்சியாளர்கள் நேர்மையாக வர வேண்டும்! என்று சிந்திப்பார்கள்.

எனவே, திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் நேர்மைக்கு எதிரானவர்களா? மனசாட்சி இல்லாமல் வாழ்பவர்களா? இல்லை, நீங்கள் அரசியல் என்றால் !தெரியாதவர்களா? நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? இந்த உண்மை உங்கள் மனசாட்சிக்கு, மட்டும்தான் தெரிந்தவை .