தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பதால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரிவிக்கிறார்.
இந்த மக்கள் செய்கின்ற தவறு இவர்கள் தலையில் தான் விழுகிறது. அதாவது இன்று மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் விதமாக பல செய்திகள் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கம் தானே தவிர, எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியும் அல்ல ,நண்பர்களும் அல்ல.
மக்கள்தான், மக்களாட்சியின் கதாநாயகர்கள் மக்கள் சரியான நபர்களை தேர்வு செய்யவில்லை என்றால், கல்வி வியாபாரமாக்கப்பட்டுள்ளது ,மருத்துவம் வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது, என்று மக்கள் பின்னால் புலம்பினால் எந்தப் பயனும் இருக்காது.
எனவே, சிந்தித்து வாக்களிப்பது தான் உங்களுடைய எதிர்காலம் !உங்கள் வருங்கால சந்ததிகளின் எதிர்காலம்! இதை புரிந்தால் உங்கள் எதிர்காலம் வளம் ஆகும்.