
ஆம் கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக பாஜக தகவல்.
ராகவ் தத்தா அரசியல் அனுபவம் மிக்கவர். சிறிய வயதிலே இவ்வளவு திறமையான அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதற்கு என்ன காரணம்?
ராகவ் தாத்தா டெல்லியில் (வயது 37). 11.9.1988 ல் பிறந்தவர். டெல்லி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்று, லண்டனில் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் பட்டம் பெற்றவர். இது தவிர, இவர் சி.ஏ .முடித்தவர்.
இவ்வளவு பட்டத்தை பெற்று அரசியலுக்கு வந்து ,இவரிடம் ஒரு துறையை கொடுத்தால், அந்தத் துறையை அக்கு வேறு, ஆணிவேராக படித்து ,அதில் இருக்கக்கூடிய ஓட்டை சட்டங்களை எல்லாம் கலைந்து, மக்களுக்கு தன்னால் என்ன? நல்லது செய்ய முடியும்? என்று செய்யக் கூடிய வல்லமை உள்ளவர்.
மேலும்,இப்படிப்பட்டவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது தவறில்லை. தமிழ்நாட்டில் ,ஒரு உதவாக்கரைக்கு மந்திரி பதவி கொடுத்து பிஜேபி 10 ஆண்டுகளாக தவறு செய்து கொண்டிருக்கிறது.
தகுதி பார்த்து மந்திரி பதவி கொடுக்க வேண்டும் ஜாதியை பார்த்து மந்திரி பதவி கொடுத்தால் இவர் ஜாதி வந்து பத்திரிக்கை துறையை சரி செய்து விடுமா? இதுவரை,மத்திய தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருக்கும் எல்.முருகனுக்கு கொடுத்திருப்பது அது ஒரு வேஸ்ட்.மேலும்,
எதற்காக ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கிறார்கள்?என்பது கூட தெரியாமல், எல். முருகன் இதுவரை தமிழ்நாட்டு சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய செய்தி துறை மூலம் இவர் செய்தது என்ன?

எவ்வளவோ கடிதங்கள், எத்தனையோ செய்திகள் ,இவருடைய கவனத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மூலம் கொண்டு சென்றுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.எவ்வளவோ கடிதங்கள், எத்தனையோ செய்திகள் ,இவருடைய கவனத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மூலம் கொண்டு சென்றுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்று மட்டும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பாக, ஆசிரியர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்வது, ராகவ் தத்தா ஒரு மேதை என்று தான் சொல்ல வேண்டும். இவரிடம் இந்த செய்தி துறையை கொடுத்துப் பாருங்கள்!

இந்த பத்திரிகை துறையை எந்த அளவுக்கு வரை முறைப்படுத்தி, சேவை என்ற நிலைக்கு எந்தெந்த பத்திரிகைகள் இருக்கிறது? என்பதை தரம், பிரித்து ,வியாபார பத்திரிகையும், கட்சி பத்திரிக்கையும், களை எடுத்து, மக்களுடைய வரிப்பணத்தை பல கோடி வீண் அடிப்பதை காப்பாற்றுகிறார? இல்லையா? என்பது தெரிந்து விடும்.
மேலும் ,இது நாட்டுக்கும், சமூக நலனுக்கும், தகுதியான பத்திரிகைகள், தரமான பத்திரிகைகள், மட்டுமே பத்திரிக்கை துறையில் அங்கீகரிப்பார் என்பது உண்மை.