கணக்கில்லாமல் கணக்கன் பழனி சாமியை நினைத்து கணக்கன்பட்டி வரமுடியாது சாமி . கணக்கன் வர சொன்னால் மட்டுமே வர முடியும். இதுதான் பழனிசாமி .

ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram

ஐயாவிடம் உன் கணக்கு இருந்தால் தான், கணக்கம்பட்டியில் நீ காலை வைக்க முடியும் .கணக்கன்பட்டி ஐயா பழனிசாமிக்கும், உங்களுக்கும், அவருக்கும் உள்ள ஒரு கணக்கு இருந்தால் ஒழிய, நீங்கள் கணக்கன்பட்டியில் காலை வைக்க முடியும். அந்த கணக்கு இல்லை என்றால், நீங்கள் எத்தனை முறை முயற்சி எடுத்தாலும், நீங்கள் அங்கே செல்ல முடியாது.

 உங்களுக்கு மனசுக்கு தோன்றாது. அடுத்தது அப்படியே போக வேண்டும் என்றாலும், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாது . ஆனால், நீங்கள் அங்கு போக வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், அந்த வழியில் நீங்கள் செல்லும்போது, உங்களை அழைத்துக் கொள்வார். அதுதான் ஐயா கணக்கன்பட்டி பழனிசாமி. அவர் உயிருடன் இருக்கும் போதும், ஜீவ சமாதி அடைந்த பிறகும், அய்யாவின் அற்புதங்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் நம் தேசத்திற்கு, தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் ஒரு இறை சக்தி. யாரெல்லாம் அவரை சரணடைந்து அவரை நேசிக்கிறார்களோ அல்லது வணங்குகிறார்களோ அவர்களை நிச்சயம் அய்யா கைவிட மாட்டார். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் அதிக அளவில் வர விட மாட்டார். அவரிடத்தில் சென்று விட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன். உன் வேலையை பார் அவ்வளவுதான், ஐயா வுக்கு கட்டுப்படாத கிரகங்களே இல்லை. அனைத்து கிரகங்களும் கட்டுப்படும் .

அவருடைய ஆற்றல் நாம் அங்கு சென்று வேண்டி தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. அவரை நினைத்துக் கொண்டு, அவருடைய நாமங்களை சொல்லிக் கொண்டு, அவருக்கு பூஜை செய்து கொண்டு, மனதார பிரார்த்தனை செய்து கொண்டு வரும்போது, அந்த புரிதல் நமக்கே தெரியும். ஐயாவை பார்க்க முயற்சி செய்து, ஓர் இரு மாதங்களாக பயணம் கை கூடி வராமல் போனது.

 ஆனால், அவர் அங்கு வந்து தான் உனக்கு நான் செய்வேன் என்பது இல்லை என்கிறாரோ என்பது தெரியவில்லை. நீ இருக்கும் இடத்திலே என்னை வேண்டினாலே போதும், நான் அங்கு வருகிறேன் உனக்காக என்று தெரிவித்திருக்கிரா ? எல்லாம் தெரிந்த பரம்பொருள் ஐயா பழனிசாமி எனக்குத் தெரிந்த அளவு இதைப் பற்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 

ஆனால், அனைத்தும் அறிந்தவர் ஐயா பழனிசாமி! அவரிடம் நம் வேண்டுதல், பிரார்த்தனைகள், வைத்தாலே அவர் நம்மை பார்த்துக் கொள்வார். நம்பிக்கை தான் அவர். முழுமையாக நம்புவோம். அவரையே சரணடைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *