வயநாடு நிலச்சரிவு இயற்கை அவ்வப்போது மக்களுக்கு நடத்துகின்ற எச்சரிக்கை பாடம். இந்தப் பாடம் புரிந்து கொள்ளும் மக்கள் மிக மிக குறைவு . இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை.

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram

மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம்.

 ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது அறிவுக்கு எட்டிய வரை எந்த இடத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ ,அநியாயம், அக்கிரமங்கள் தலை விரித்தாடுகிறதோ ,அங்கே இயற்கை பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்காது. அது ஒரு நொடியில் அனைத்தையும் தரைமட்டமாக்கி விடும். அதுதான் இயற்கையின் கோபம். மனிதன் இயற்கைக்கு கட்டுப்பட்டவன்.

சத்தியம், தர்மம், தெய்வ நெறி, ஒழுக்கம் இதையெல்லாம் எங்கு அதிக அளவில் மீறப்படுகிறதோ, அங்கே ஏதோ ஒரு விதத்தில் இயற்கை அப்பகுதியை நொடியில் அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவமாக தான், இந்த வயநாடு நிலச்சரிவு இருக்கலாம். கேரள பூமி ஆன்மீக பூமி. தெய்வ ஸ்தலங்கள் நிறைந்த ஒரு புண்ணிய பூமி. கேரள மக்களும் அந்த தெய்வ நம்பிக்கையில் இருந்து வழிபடுபவர்கள், வாழ்பவர்கள். அப்படிப்பட்ட பூமியில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்திருப்பது இதை ஆன்மீக நாட்டத்தில் இருப்பவர்கள், அவர்கள் சொல்லும் கருத்து இதுதான் என்கிறார்கள். 

நாம் அந்த பகுதியை போய் பார்த்தது கிடையாது. வய நாடு என்ற ஒரு தொகுதி கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கிறார், என்று நம் செய்திகளை படித்து இருப்போம். ஆனால், அங்கு என்ன நடந்தது? நடக்கிறது? மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? இதுவெல்லாம் நமக்கு தெரியாத ஒன்று. ஆனால், ஆன்மீக அன்பர்கள் சொல்லும் கருத்து இதுதான். கலிகாலத்தின் உச்சகட்டம் இந்த பேரழிவு சம்பவம்.

 மக்கள் மனசாட்சி இல்லாமல் பேசுவது, மனசாட்சி இல்லாமல் வாழ்வது, தெய்வம் என்பது ஒன்று இல்லை. அது ஏமாற்றுகிற வேலை. இப்படியெல்லாம் பொய்யை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இது இயற்கையின் பேரிடர். இது விஞ்ஞானத்தின் வரைபடத்தில் குறிப்பிட்ட இடம் காட்டப்பட்டுள்ளது. இப்படி ஏதோ ஒரு பதிலை தயாராக சொல்வதற்கு இருப்பார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால், அதே விஞ்ஞானம் இந்த இடத்தில் தான் நிகழ வேண்டும் என்று ஏன் அங்கு மட்டும் காட்டுகிறது ?எத்தனையோ இடங்கள் இருக்கலாம். எங்கும் நிகழலாம். அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, கடவுள் என்ற ஒரு சக்தி உலகம் முழுதும் பரவியுள்ள உயிர்களை ,இறைவன் சக்தி குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அது நிகழ வேண்டும் என்ற கணக்கு ஏன் ?அதனுடைய ஒரு கோர அழிவு? ஏன் ?மேலும்,

தமிழ்நாட்டையும் ,இந்தியாவையும் புனித ஆத்மகளும், தெய்வ எண்ணங்களில் வாழ்பவர்களும், சித்தர்களும், மகான்களும், தர்ம சிந்தனை உள்ளவர்களாலும், அறநெறி கடைப்பிடித்து வாழ்பவர்களாலும், தர்ம சிந்தனை உள்ளவர்களாலும், சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களாலும் ,இந்த உலகம் அவர்களுக்காக, இயற்கை அவர்களுக்காக, இறைவன் அவர்களின் அன்புக்காக, இந்த உலகம் இயங்குகிறது .

நாட்டின் பொருளாதாரம், விஞ்ஞானம், பொறியியல் இவை அனைத்தும் அதன் இயக்கத்திற்கு கட்டுப்பட்டது. அதாவது பஞ்சபூதங்கள் என்ற இறை சக்திக்கு கட்டுப்பட்டது . இங்கே அதிகாரம், பணம் எதுவும் செல்லாது .ஜாதி ,இனம், மொழி, எல்லாவற்றையும் கடந்தது தான் இவை அனைத்தும் இப்போது இந்த பாடங்கள் புரிகிறதா? சுயநலத்தில் தான் மட்டுமே, எத்தனை கோடி வேண்டுமானாலும், அதிகாரத்தால் அதாவது மந்திரி பதவியில் சேர்த்துக் கொள்ளலாம்? 

இவை அனைத்தும் எங்கே கொண்டு போய் சேர்க்க போகிறாய் ? எங்கே எடுத்துக் கொண்டு போகப் போகிறாய்? எதுவும் இல்லை . அரசியல், அரசியல் கட்சி, அரசியல் அதிகார பதவி ,இவை அனைத்தும் பொது நலம். பொதுநல வேலைக்கு வந்து விட்டு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இறைவனை எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் என்பதை புரிந்து கொள்வீர்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *