உச்சநீதிமன்றத்தின் ஓவர் ஆட்டத்திற்கு செக், வைக்கும் – ஜனாதிபதி மாளிகை .

சமீப காலமாக உச்ச நீதிமன்றம் !மத்திய, மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் அதிக தலையீடுகளால், சட்ட சிக்கல் மற்றும் மத்திய ,மாநில அரசின் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அதன் எதிரொலியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநில ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு வருவதால், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இரண்டு நீதிபதிகளின் அமர்வு ,அந்த சட்ட மசோதாவை உச்ச […]

Continue Reading

விஜயின் அரசியல் திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் வரிசையில் மாநாட்டில் குற்றச்சாட்டுகள் – இவருடைய அரசியல் பேச்சு ‌ தேசத்திற்கு எதிரானது .

விஜய்க்கு அரசியல் தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் ,ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் வசனத்தை பேசுவது போல் ,அரசியலிலும் பேசிக்கொண்டு வருகிறார். ஒட்டு மொத்தமாக எல்லா எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், இதே பரப்புரையாக தான் இருந்து இருக்கிறது. அதாவது வாக்கு திருட்டு ! வாக்கு யார் திருடுகிறார்கள்? என்பது தெரியாமல் ராகுல் காந்தியும், மாயாவதி ,அகிலேஷ் யாதவ், மு. க. ஸ்டாலின் ,அந்த வரிசையில் தற்போது விஜயும் இதைப் பற்றி பாஜக மீது குற்றம் சுமத்தியுள்ளார். கள்ள ஓட்டு போடுவதை […]

Continue Reading

அண்ணாமலையின் அரசியல் ! பாஜகவில் ஒரு ஸ்பெஷல் என்ட்ரி ஆக தான் பார்க்கப்பட்டது. ஆனால், பதவி வந்தவுடன் இவரும் 10 ல், 11 தானா?

இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லா கட்சியிலுமே, அவரவருடைய நேர்மையின் அளவை , இன்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மட்டும்தான் பணத்திற்காக ,அவர்களுடைய நம்பிக்கையை இந்த அரசியல்வாதிகள் மீது இழக்கவில்லை. காரணம், பணம் கொடுத்து இவர்களுடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. மேலும்,பாஜகவில் அண்ணாமலை ஓரம் கட்டப் […]

Continue Reading

காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களையும், கண்காணிக்கும் ஒரு துறை !அமைக்கப்பட்டால், ஏழை ,நடுத்தர மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை. வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை […]

Continue Reading

அதிமுகவில் நீக்கியவர்களை ஒன்று சேர்க்க செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பு – எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ – குழப்பத்தில் அதிமுக .

அதிமுகவில் நீ கேவர்களை ஒன்று சேர்க்கலாம் என்று அத்தாட்சியின் சீனியர்கள் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ சொல்லி வருகிறார். இது ஒரு பக்கம் அதிமுகவில் சலசலப்பையும் மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பக்கம் அது கட்சிக்கு நல்லது தானே என்று பேசி வருபவர்களும் உண்டு. மற்றொரு பக்கம் அவர்களை சேர்த்தால் எடப்பாடிக்கு அது எதிராக வரும் என்ற ஒரு கருத்து பழனிசாமிக்கு இருந்து வருகிறது. இவர்கள் உள்ளே வந்து விட்டால், நம்முடைய அரசியலில் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை […]

Continue Reading

அதிமுக இரண்டாக உடையுமா? அல்லது பிரிந்தவர்களை எடப்பாடி ஒன்று சேர்ப்பாரா? அல்லது பிஜேபி தலைமையில் கூட்டணி அமையுமா? – விடை எடப்பாடி பழனிசாமி .

மக்கள் அதிகாரத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதிமுக இரண்டாக உடையுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி இவர்களை ஒன்று சேர்ப்பாரா? இப்படி பல கேள்விகளுக்கு விடை எழுத வேண்டிய காலகட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் நின்று கொண்டிருக்கிறார். இவர் நினைப்பது போல், அதிமுக வெற்றி பெறுமா ? என்பது புரியாமல் கூட்டத்தை காண்பித்து பேசிக் கொண்டிருக்கிறார். காசுக்காக கூட்டம் கூடுவது ,கூட்டத்தை காட்டுவது பெரிய வேலை அல்ல. மேலும், அவர்களெல்லாம் கொள்கைவாதிகளும் அல்ல. இவர்களை எல்லாம் எளிதில் விலைக்கு […]

Continue Reading

வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா? எப்படி ஒரு டி .எஸ். பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே […]

Continue Reading

பிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?

பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா? காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக. அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் […]

Continue Reading

ஏர்போர்ட் மூர்த்திக்கும், திருமாவளவனுக்கும் உள்ள அரசியல் போட்டியில் திமுக அரசு,ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது அரசியல் உள்நோக்குமா ?

ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர். அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து […]

Continue Reading