தமிழக முதல்வர் விஜயின் அரசியல்! முப்பெரும் விழாவில்! ஸ்டாலின் அருவருப்பாக இருக்கிறது என விமர்சனம் – அதை தமிழக மக்கள் சொன்னார்களா?

திமுக ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! அவர்களது முப்பெரும் விழாவில் ,அருவருப்பாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும்,தமிழக மக்கள் அருவருப்பாக இருக்கிறது என்று மனசாட்சி உள்ளவர்கள் யாரும் சொல்லவில்லை. தவிர,மனசாட்சி இல்லாதவர்கள் தான் சொல்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சி என்றால், நாட்டில் எப்படியும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது, இந்திய அரசியலில், தற்போது மக்களை ஏமாற்றும் அரசியல். அந்தக் காலத்தில் ,எதிர்க்கட்சியாக இருந்தாலும் ,நல்லது செய்ததை வரவேற்று பேசினார்கள் .கெட்டது என்றால் ,அதை ஆளும் கட்சிக்கு […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது ‌‌. அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும். அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி? அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி? மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு! அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில்! சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று, இவை அனைத்திலும் சவால்கள் நிறைந்ததா?

சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில், நிலத்தை தேர்வு செய்ய தமிழக அரசு ,கும்மிடிப்பூண்டி வட்டத்திலும் ,மதுராந்தகம் வட்டத்திலும் ,தேர்வு செய்யப்பட்ட இடங்கள் சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு சவால்களாக உள்ளது. மேலும்,தற்போது இரண்டாவது விமான நிலையத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் இரண்டு பகுதிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தடையில்லா சான்று போன்றவற்றிற்கு சவால்களாக உள்ளது. மேலும்,செய்யூர் பகுதி தேர்வு செய்யப்பட்டதற்கு […]

Continue Reading

திமுகவினரை கைது செய்வதால்! அவர்கள் மோசடி செய்த பணத்தை தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் இருந்து எடுப்பாரா? – தமிழக மக்கள் .

தமிழக முதல்வர் விஜய் திமுகவை எதிரியாக அரசியல் செய்து தான் ஆட்சிக்கு வந்தார். வந்தவர் இன்னும் ஒருவரை கூட கைது செய்யவில்லை. மேலும் ,பத்திரிகைகளில் தான் கைது வாய்ப்பு, கைது செய்யப்படுவார் என்று எழுதிக் கொண்டிருக்கிறோமே தவிர, ஒருவரையும் கைது செய்யவில்லை. தவிர,அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, மோசடி செய்து கொள்ளையடித்த பணத்தை எப்போது இந்த தவெகஆட்சி கைப்பற்ற போகிறது? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி? மேலும்,துரைமுருகனின் மணல் கொள்ளை ,அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் கல்வி […]

Continue Reading

இந்தியாவுக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால், மோடி இடத்தை யாராவது பிடிக்க முடியுமா ?

இந்தியாவுக்கு வந்த பிரதமர்களில் மோடி இடத்தை யாரும் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான், மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அன்னிய நாட்டு தலையீடுகளை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி. அவருடைய அரசியல் சாணக்கியத்தனத்தில் ஐந்து சதவீதம் கூட ராகுல் காந்தி இருக்க மாட்டார். ஏன்? காங்கிரஸ் கட்சியிலே, ஒருவர் கூட கிடையாது. அந்த அளவுக்கு இந்த நாட்டின் மீது, இந்த தேசத்தின் மீது பற்று வைத்துள்ளவர் […]

Continue Reading

தாராபுரம் மதுராந்தகம் இடைத் தேர்தல் ! தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக,அதிமுக டஃப் கொடுக்கப் போகிறதா?- அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

நாளுக்கு நாள் மகளிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதை மறுக்க முடியாது. இருப்பினும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல், தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் கடுமையான போட்டியாகத் தான் இது இருக்கப் போகிறது . மேலும்,விஜயின் ஆட்சி! மக்களுக்கு இன்னும் 100% நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அதிமுக, திமுகவுக்கு இது பரவாயில்லை அப்படிதான் மக்கள் நினைக்கிறார்கள். தவிர,இதில் வேட்பாளரின் தேர்வு மிக முக்கியமானது. இங்கே, அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் தன்னுடைய சட்டமன்ற […]

Continue Reading

புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி. மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது. இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் […]

Continue Reading

பத்திரிக்கை ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் ஸ்டாலின் மிசாவில் கைது!ஸ்டாலின் மிசாவில், கைதானால் என்ன? ஆகாவிட்டால் என்ன? – இது தமிழக மக்களுக்கு முக்கியமாக அது தேவையா?

மக்களை முட்டாளாக்கும் இந்த சோசியல் மீடியாக்கள் அரசியல் கட்சியினர் ஸ்டாலின் மிசா கைது, பற்றி ஒரு வாரமாக இதையே போட்டுக் கொண்டு இது ஒரு பெரிய செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,ஸ்டாலின் அவ்வளவு பெரிய அரசியல் தியாகி அல்ல ,அவரே ஒரு ஊழல் அரசியல்வாதி. இப்படிப் பட்டவருக்கு இவ்வளவு பில்டப் எதற்கு? என்பதுதான் இந்த பத்திரிகைகளும் ,சோசியல் மீடியாக்களும் ,தொலைக்காட்சிகளும் முக்கியத்துவம் கொடுப்பது, […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading