சேலம் வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சேலம்மாவட்டம் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது.

மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், ‘என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?’ என்றார். இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் ஈடுபட்டார். எழுந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, உமாராணி உள்ளிட்ட தி.மு.க.,வினரும் அமர்ந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின் கூட்டத்தில் பங்கேற்றதற்கு அடையாளமாக, ‘மினிட் நோட்’டில் அருள் கையெழுத்திட்டு சென்றார். சிறிது நேரத்தில் உமாராணி உள்ளிட்ட அனைவரும் எழுந்து செல்ல, கூட்டமும் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *