
ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில், விவாத மேடை நடத்த அரசியல் கட்சியினரை உட்கார வைத்து, அவர்களிடம் கேள்வி கேட்பது, பேச வைப்பது, என்பது இது ஒரு டிராமா அரசியல்.

இதுவும் ஒருவிதமான போலி அரசியல் தான். இந்த போலி பத்திரிக்கையின் பிம்பத்தில் தொலைக்காட்சிகள் ,இதை நடத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பற்றி மக்கள் அதிகாரத்தின் செய்தியில் விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளன. மேலும்,கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பற்றி மக்கள் அதிகாரத்தின் செய்தியில் விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளன. மேலும்,

நாட்டில் உண்மைக்கும், போலிக்கும் அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும், படித்த சமுதாயம் அதாவது இதை அரசாங்கமும், சம்பந்தப்பட்ட செய்தி துறையும், இதற்குள் இருக்கின்ற அரசியல், அரசியல் கட்சிக்கும், பத்திரிக்கை துறைக்கும் என்ன சம்பந்தம்?
நீ அரசியல் கட்சி என்றால்! கட்சியோடு நின்று விடு. பத்திரிகை என்றால் பத்திரிகையோடு நின்று விடு. நான் பத்திரிகையிலும் இருப்பேன், அரசியல் கட்சியிலும் இருப்பேன், இது யாரை ஏமாற்றும் வேலை? சரி இரண்டிலும் கூட இருந்து கொள். அது என் விருப்பம் என்று கூட நீ சொல்லலாம்.
ஆனால், பத்திரிகை வேறு, அரசியல் கட்சி வேறு, என்பதாவது உனக்கு தெரியுமா? தெரியாதா? அடுத்தது, அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கு எப்படி அதற்கு சலுகை, விளம்பரங்கள்? அதற்கும் சர்குலேஷன் சட்டமா? அரசு செய்தி போடுவதால், நாங்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கிறோம் என்பதை செய்தித் துறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படி சொன்னால், செய்தித் துறை!பத்திரிக்கை துறையை நிர்வாகம் செய்ய தகுதி இல்லை.

அடுத்தது ,அரசியல் கட்சிக்கு வருவோம் .அடியாட்களுக்கும் ,அரசியல்வாதிக்கும் அர்த்தம் தெரியாமல், இன்று அரசியல்வாதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடியாட்கள் கூட்டம் தான் ,சண்டைக்கு அரசியல் கட்சிகளில் மல்லு கட்டிக்கொண்டு, இப்போது நீயா? நானா? என்று போட்டியில் இறங்கி இருக்கிறது. மக்கள் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளாமல், வாழ்ந்து கொண்டிருப்பது, இந்த கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளும், இவர்களை தொண்டன் என்றும், பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும், இருக்கிறார்கள்.இது தான், இந்த பிரச்சனை சமூகத்தில் பொதுமக்களும், இவர்களுடன் போராட வேண்டி இருக்கிறது . மேலும்,
தொலைக்காட்சியில் இப்படி ஒரு விவாத மேடை நடத்துவது மிகப்பெரிய தவறு .அதிலும், அடியாட்களுக்கு தகுதியானவர்களை அரசியல் கட்சியினர் என்று உட்கார வைத்து, அவர்களுடைய கருத்தை சொல்ல சொன்னால்! எல்லோரும் என்ன கருத்து சொல்வார்கள்? பொதுவான கருத்து சொல்வார்களா? அப்படி சொல்வார்கள்? அவர்களுக்கு என்ன தெரியுமோ அதை தான் அவர்கள் பேசுவார்கள்.
இவர்களே அரசியல்வாதி என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள். ஒரு அரசியல்வாதி, நேர்மையாக மக்களுக்காக, பேசக்கூடியவனாக தான் இருப்பான். ஆனால், இவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்களோ, அந்த கட்சியில் முட்டுக் கொடுக்க பேசிக் கொண்டிருப்பார்கள். இதை விவாத மேடை என்று முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், பெரிய தொலைக்காட்சி என்ற ஒரு பிம்பம், முதலீடு பெரிதாக இருக்கலாம். கருத்து சிறியது, உண்மை சிறியது . எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போனதால் தான், இன்று அடித்துக் கொண்டார்கள்.

இப் போதாவது பத்திரிகையின் போலித் தன்மையும், அரசியல்வாதியின் போலித் தன்மையும், தெரிகிறதா? இது பத்திரிகையில் வேலை செய்யக்கூடிய பெரிய பத்திரிகை நிருபர்களுக்கும் தெரியாது. சிறிய பத்திரிகைகளுக்கும் தெரியாது. மக்களுக்கு எப்படி தெரியும்? எந்த சோசியல் மீடியாவும் இந்த உண்மை சொல்லவில்லை. எந்த youtuber களும் பேசவில்லை. மக்கள் அதிகாரம் இது பற்றி பலமுறை பேசியிருக்கிறது. எடுத்துச் சொல்லி இருக்கிறது.
அதனால் தான் இன்று நாட்டில் போலி பத்திரிகைகள் கூட்டம் , உண்மையான செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை விட அதிகமாக இருக்கிறது. தவிர, பத்திரிகையின் அடையாள அட்டை பணம் கொடுத்து வாங்கியவர்கள் எல்லாம் செய்தியாளர்கள்.

இதைவிட கொடுமை,ஆட்டோ ஓட்டுபவனுக்கு கூட பிரஸ் கார்டு வழங்கி இருக்கிறார்கள் .இந்த சங்கங்கள். மூட்டை தூக்குபவர்களுக்கு கூட பிரஸ் கார்டு வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் எந்த பத்திரிகையில் வேலை செய்தார்கள் என்ற விபரம் இவர்கள் வைத்திருக்கும் சங்கத்தின் அடையாள அட்டையில் இருக்காது.இதுஎன்ன அரசியல் கட்சி கூட்டமா? அங்குதான் தகுதி தேவையில்லை.
ஆனால், பத்திரிகை என்று வரும்போது நிச்சயம் தகுதி தேவை. ஒரு தகுதியற்றவனால் செய்தி எழுத முடியாது. பத்திரிக்கை நடத்த முடியாது. அப்படி என்றால், இங்கே தகுதி என்பது மிக, மிக அவசியமானது.

இங்கே செய்தியாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்குமே அதனுடைய தகுதி கூட தெரியாதவர்கள் எல்லாம், பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவனும் ஜர்னலிஸ்ட் என்று சில பேர் போட்டுக் கொள்கிறார்கள். அது தவறானது. ஜர்னலிஸ்ட் இரண்டு போட்டுக்கொள்ள தகுதி வேண்டும்.

ஒரு சப்ஜெக்ட் கொடுத்தால், அதைப்பற்றி ஒரு கட்டுரை சரியான முறையில் எழுதிக் கொடுக்கக்கூடிய தகுதி இருப்பவன் தான் ஜர்னலிட் (journalist).அவனுக்கு மட்டுமே பத்திரிக்கையாளர் என்று போட்டுக் கொள்ள தகுதி உண்டு .மீதி எல்லாம் தகுதி இல்லை. மேலும்,
செய்தியை சரியாக எழுதத் தெரியாதவன் எல்லாம் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், ஏதோ தினசரி பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை என்றும், தொலைக்காட்சி என்றால் பெரிய பத்திரிக்கையின் பிம்பம் என்றும், தினமணி, தினத்தந்தி, தினமலர், என்றால் பெரிய பத்திரிகை ஊடகங்கள் என்றும், இந்த லேபிளையை வைத்து போலியான பத்திரிகை பிம்பத்தை இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ,லேபிள் என்பது ஒரு பத்திரிகையின் பெயர் தான். மக்கள் அதிகாரம் என்றால்! அது ஒரு பத்திரிக்கையின் பெயர் .ஆனால் ,அது எப்படி செய்தியின் அடையாளம் என்று நினைத்துக் கொள்வது ?அப்படித்தான் இன்று இந்து ,இந்தியன் எக்ஸ்பிரஸ் படிப்பவர்கள், பணியாற்றுபவர்கள், நினைக்கிறார்கள்.

அது வேறு ,இது வேறு, ஒரு சாதாரண பத்திரிக்கை ,இந்த அளவுக்கு அந்த பத்திரிகைகளை பற்றி பேசுகிறாரே என்று கூட பல பேர் நினைக்கலாம் .அதை பற்றி கவலை இல்லை. உண்மை என்னவோ ,அதை தான் சொல்லி இருக்கிறேன்.
அதற்கு உதாரணமே, நேற்று முன்தினம் தொலைக்காட்சி விவாத மேடையில் அடித்துக் கொண்ட ,இந்த சம்பவம் . செந்தில் என்பவர் பத்திரிக்கையின் போர்வையில் இருந்து கொண்டு, அரசியல் கட்சியினராக இருந்து வருகிறார் . மேலும்,
இப்படி இருப்பவர் பத்திரிகையாளனாக பேசுவாரா? அல்லது அரசியல் கட்சியினராக பேசுவார? இந்த தொலைக்காட்சி விவாத மேடையை கேட்கிறேன்? யாராக இவர் பேசுவார்? ஒன்று இவர் அரசியல்வாதியாகவும், இல்லை. அடுத்தது பத்திரிகையாளனாகவும் இல்லை.இதுதான் இரண்டிலும் உள்ள போலி தன்மை. இதற்குரிய தகுதி என்பதை நிர்ணயித்தாவது இந்த தொலைக்காட்சி விவாத மேடை நடத்தி இருக்க வேண்டும்.அதுவும், தவறு.

மேலும் ,ஒருவருடைய தகுதியை நிர்ணயித்து, நீ விவாத மேடைக்கு அவர்களை கொண்டு வந்து, இவர் யார்? என்பதை மக்களிடம் அறிமுகம் செய்திருக்க வேண்டும். தவிர,பணத்தை வைத்து பெரிய தொலைக்காட்சி நடத்தலாம். ஆனால், பணத்தை வைத்து தகுதியை விலைக்கு வாங்க முடியாது. இந்த உண்மை செய்தி துறைக்கும், பத்திரிக்கை துறைக்கும், சர்குலேஷன் என்ற சட்டம் இதற்குள் அடங்கி விடுகிறது. இப்போதாவது உண்மை புரிகிறதா?
மேலும், தொலைக்காட்சிகள், விவாத மேடையில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் தகுதி என்ன ?திறமை என்ன? என்பதை மக்களிடம் சொல்லி இருக்க வேண்டும். அதாவது ,இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி, இத்தனை ஆண்டு காலம் இவருடைய நேர்மை அரசியலில் இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
அடுத்தது பத்திரிக்கை என்றால் !இவருடைய பத்திரிகையின் தகுதி, திறமை வெளிப்படுத்தக்கூடிய நடுநிலைத் தன்மை இதை வைத்து தான் அவருடைய தகுதியை நிர்ணயித்து ,தொலைக்காட்சிகள் உட்கார வைத்திருக்க வேண்டும். இதை கூட இவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டி இருக்கிறது. மேலும்,என்னவோ பெரிய பேனர் ,பெரிய லேபிள் என்று பேசிக் கொள்கிறார்களே ,இப்போது தெரிகிறதா ?இந்த உண்மை! மக்களுக்கு? மேலும், இந்த பத்திரிகை உலகத்திற்கு புரிகிறதா? இந்த உண்மை
இது தவிர,அடியாட்களை எல்லாம் அரசியல் கட்சியினர் என்று அரசியல் கட்சிகள் பொறுப்புகளை கொடுத்து, அவர்களை அரசியல்வாதிகளாக, ஆக்கியிருக்கிறார்கள். அதாவது,அடியாட்களை நாமும், அவர்களை அரசியல்வாதி என்று எப்படி நினைப்பது? நினைக்க முடியாது. இது அரசியல் தெரிந்தவருக்கு தெரிந்த உண்மை. தெரியாதவன் குருடன், அவன் என்ன சொன்னாலும், கேட்டுக் கொண்டிருப்பான். உண்மையை பார்த்தால் தானே தெரியப்போகிறது. உண்மையைப் பார்க்கத் தெரியாத குருடர்களுக்கு ,இப்போது இந்த உண்மையாவது கேட்டு புரிந்து கொள்ளட்டும்.

மேலும்,இவர்கள் திமுகவும், பிஜேபியும், அடித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருக்கும் அரசியலுக்குள் நான் போகவில்லை. இந்தத் தவறுக்கு என்ன மூல காரணம்? அதை மட்டுமே மக்களுக்கு புரிய வைத்திருக்கிறேன். பத்திரிக்கை துறைக்கு புரிய வைத்திருக்கிறேன். அரசியல் கட்சியின் இருக்கக்கூடிய வைக்கிறேன். ஆசிரியர்.
Editor.