
அதிமுக அரசியல் கட்சியினருக்கு இன்னும் ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புள்ளது .அதனால் இப்போது இருந்தே உழையுங்கள் .
மக்கள் கிட்ட எப்படி உழைக்க சொல்கிறார்? என்பது தான் எனக்கே புரியவில்லை. அதாவது கையில ,கால்ல விழுந்து ,உழைக்க சொல்றாரா?
இல்லை வீடு, வீடாக சென்று ஓட்டு போட , அரசியல் தெரியாதவர்களிடம் ஓட்டுக்களை விலை பேச சொல்கிறார்களா?
மேலும்,கட்சிக்காரர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை போல் உழையுங்கள் .
இது அறிவுரையா? இல்லை அரசியல் உரையா?உழைப்புக்கும் அர்த்தம் தெரியாது. உழைப்பு என்றால் எப்படி எல்லாம் மக்களை பேசி கவர்வதா? அல்லது ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுவதா?
என்ன உழைப்பை? இவர்கள் மக்களிடம் கொடுக்கப் போகிறார்கள்? மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஒரு வேலை! அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றலாம்.
அதனால் ,அவர்களிடம் அங்கே உழைக்க சொல்வாரோ! யாருக்குத் தெரியும்? உழைக்க சொல்வது! பிழைக்க சொல்வதா?
இதற்கு பல அர்த்தங்கள் தமிழ்நாட்டின் அரசியலில் போய்க் கொண்டே இருக்கிறது. எப்படியோ மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள்.
இல்லையென்றால் !மீண்டும் ஒரு ஊழல் ஆட்சியை தமிழ்நாடு பார்த்திருக்குமோ !
