
நீட் வினாத்தால் கசிவுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நீட் வினாத்தாள் மாணவர்கள் பிரச்சனை! இது எப்படி அரசியலாக்கப்பட்டது?
மேலும் ,இந்த மாணவர்கள் அப்படியே பேசினாலும் , நீட் சம்பந்தப் பட்ட பிரச்சனையை பற்றி தான் பேச வேண்டும். ஆனால்,இவர்கள் ஒருபுறம் நீட்டைப் பற்றி பேசிக்கொண்டு, மற்றொருபுறம் ,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ,தர்மேந்திர பிரதானுக்கும், நீட் வினாத்தாள் கசிவுக்கும் என்ன சம்பந்தம்? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்வது, தான் மாணவர்களின் நியாயமான கோரிக்கை .

ஆனால், இதிலே அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் எழுதிக் கொடுத்தாரா? அவருக்கு அது பற்றி தெரியுமா? இப்படி பல கேள்விகள் அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும், மாணவர்கள் பிரச்சனை எப்படி அரசியல் ஆக்கப்பட்டது? எதிர்க்கட்சிகள் ஆன காங்கிரஸ் கட்சி, எப்படி உள்ளே வந்தது?

மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது அவர்களுடைய எதிர்கால நலனுக்கு ஆபத்து . அவர்களுடைய கல்வி கேள்விக்குறியாகி, குடும்ப வாழ்க்கையின் பாதிக்கிறது. எனவே,மாணவர்களின் போராட்டம் அது அரசியலாக வன்முறையாக இருக்கக் கூடாது.
மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய எவரையும் விடமாட்டோம். மேலும், இந்த நீட் வினாத்தாள் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும், அதற்கான நீதிமன்றம் அமைத்து, தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
