பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது.

விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது.

திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் ?என்றால் ஏழை ,எளிய நடுத்தர மக்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகிறார்கள் .

மேலும்,அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களை விட்டு விட்டு, அந்த விவசாயத்தையே நம்பி பல தலைமுறைகளாக இருப்பவர்களை, பணம், காசு கொடுத்து அவர்களை பல்வேறு ஊர்களுக்கு பிழைக்க அனுப்புவது போல் ,செய்யக்கூடிய வேலை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

மேலும்,எந்த ஒரு திட்டமும், மக்கள் நலனுக்காக திட்டமிட வில்லை. இவர்கள் நலனுக்காக திட்டமிட்டு கொண்டார்கள். ஆனால், உண்மையிலேயே முதல்வர் ஜோசப் விஜய் முதன் முதலில் இந்த கிராமத்திற்கு தான் வந்து நிச்சயம் உங்களுக்காக நான் துணை நிற்பேன் என்று இந்த மக்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். அதை நிறைவேற்றும் காட்டிவிட்டார்.

மேலும்,ஏழையும், நடுத்தர மக்களும், பிழைப் பதற்காக இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். வசதி படைத்தவர்கள், கார்களில் செல்கிறார்கள்.

அதற்கும் மேலே வசதி படைத்தவர்கள் சொகுசு வாகனங்களிலும் ,ஆகாய விமானங்களிலும், பயணிக்கிறார்கள். ஆனால் ,கடவுள் மகிழ்ச்சி என்ற நிலையை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தான் கொடுத்து வைத்திருக்கிறார்.

நீ ஆகாய விமானத்தில் பறந்தாலும் உனக்கும் அதே மகிழ்ச்சி. ஒருவன் மாட்டு வண்டியில் பயணித்தாலும் அவனுக்கும் மகிழ்ச்சி இடம் தான் வேறுபடுகிறது .வேகம் தான் வேறுபடுகிறது .ஆனால், ஆபத்து மாட்டு வண்டியில் பயணிப்பவனுக்கு மிக ,மிக குறைவு. விமானத்தில் பயணிப்பவனுக்கு ஆபத்து ஒரு நொடியில் வந்து விடுகிறது.

மேலும், தற்போது வாழ்க்கை என்பது பணமே என்று நினைப்பவர்களுக்கு, நிம்மதி, சந்தோஷம் எங்கே ?என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாமானியன் வாழ்க்கை எளிமையாக வாழ்ந்து கொண்டு பிறப்பின் நோக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறான். பணக்காரன் சந்தோஷத்தின் உச்சத்தை தேடிக் கொண்டிருக்கிறான்.

இதில் யார் பெரியவர்கள் ?யார் சிறந்தவர்கள் ?என்று இன்னும் மக்கள் இதற்கு அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து விட்டு போய்விடுகிறார்கள். பட்டம், பதவி, சொத்து, சுகம் இது எல்லாவற்றையும் தேடிக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும், மனிதர்கள், பிறப்பின் நோக்கத்தை மறந்து விட்டால், பிறப்பின் பயன் அர்த்த மற்றது.

அதுபோல் தான், மக்களுக்கு எது தேவையானது? என்று ஒரு அரசு தீர்மானிக்க வேண்டும். அது மக்களுக்கு தேவையானதா? தேவையற்றதா? விமான நிலையம் தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும், பணக்காரர்களுக்கும், முக்கியத்துவமானது. ஆனால் ,ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு அவர்கள் எப்போது விமானத்தில் பயணிப்பார்கள்?

அவர்களுக்கு அது தேவையா? நீங்கள் விமான நிலையத்தை கொண்டு வந்து ,அந்த கிராமத்தில் வைத்து விட்டு, கிராம மக்களின் வாழ்க்கையின் நோக்கம் ,அர்த்தமாற்றதாகி விடும் . மேலும்,பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு இருக்கலாம், பணக்காரர்களுக்கு இருக்கலாம், ஆனால்,

இந்த ஏழை ,எளிய நடுத்தர, மக்களின் பொருளாதார வளர்ச்சி! இதனால் எங்கே இருக்கும்? இதனால் அவர்களுடைய சந்தோஷம் எங்கே இருக்கும்? 18 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு, நாங்கள் விமான நிலையம் அமைக்கிறோம்.

மேலும்,சுற்று வட்டார பகுதியில் இருக்கின்ற நிலத்தை எல்லாம் நாங்கள் வளைத்துப் போட்டுக் கொள்கிறோம். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இந்த நாட்டு மக்கள் இனி ஒரு காலம் அதைப் பற்றி சிந்திக்க கூட கூடாது .

மேலும்,சுயநலத்திற்காக கட்சி! பொது நலத்திற்காக அரசியல் கட்சி அல்ல. அதனால், இப்பகுதி கிராம மக்கள் , இந்தியாவுக்கு போராடி சுதந்திரம் பெற்றது போல், ஆட்சி மாற்றத்தால் பரந்தூர் கிராம மக்களுக்கு தற்போது தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

அதனால், விவசாயிகள்! ஏழை எளிய, நடுத்தர மக்கள் ,தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *