
இந்து மதத்தில் முருகனை வழிபட இவர்கள் யார் குறுக்கே! உங்களைக் கேட்டு தான் கடவுளை கூட இந்துக்கள் வழிபட வேண்டுமா? இந்துக்கள் வாக்களித்தது உங்களைக் கேட்டு முருகனை வழிபட அல்ல.மேலும்,அவர்களுடைய மத உரிமையில் தலையிட யாருக்குமே தகுதி இல்லை.

திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. எதற்காக இந்த மேல்முறையீடு? இதற்கு திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும்,

வெங்கடேசன் எம்பி ,இந்த தீர்ப்பை பார்த்து கொதித்து எழுந்து தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை நடத்த மதவாத சக்திகள் முயற்சிக்கிறது என்கிறார். முருக பக்தர்கள் கொதித்து எழுந்து வெங்கடேசனை வசை பாடி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட
வெங்கடேசனுக்கு ஓட்டு போட்டு இந்துக்கள், வெட்கித் தலை குனிய வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு அவர்களே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஒரு அருவருப்பான வார்த்தைகளால் பேசியது இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

மேலும்,பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இவர்களுக்கு எல்லாம் ஒரு வாய்ப்பை கொடுத்து, மந்தரி பதவியில் உட்கார வைத்தது, இது கடவுளுக்கே கொடுத்துக் கொண்ட சோதனையா?

இல்லை, மக்கள் தங்களுக்கு ,தாங்களே கொடுத்துக் கொண்ட சோதனையா? இவர்களுடைய அரசியலை மதப் பிரச்சனையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்து மதத்திற்கு எதிராகவும், தெய்வத்திற்கு எதிராகவும் பேசி நாட்டை பிடிக்க முயற்சி செய்தார்களோ, அதே மதப் பிரச்சினை அதே கோயில் பிரச்சனை திமுகவை அடியோடு வீழ்த்தப் போகிறது.

இதனுடைய ஆரம்பம் எங்கயோ ,அதன் முடிவும் அங்கே இயற்கை தீர்மானிக்கிறது. மேலும், திருப்பரங்குன்றம் முருகனுக்கு மலையில் தீபம் ஏற்ற கூடிய பக்தர்கள் கூட்டம் இவ்வளவு பெரிய கூட்டமா? என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இதுதான் இந்த ஆட்சிக்கு மக்கள் எப்போது பாடம் புகட்ட வேண்டும் ?என்று நாளை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும்,பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றத்தில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது, நாட்டில் நல்லவர்கள் ஆட்சி செய்ய ,நாட்டு மக்கள் வளமுடன் வாழ ,நீதி தழைக்க, தர்மம் வாழ, நல்லாட்சி மலர்ந்திட அந்த முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் என்கின்றனர் முருக பக்தர்கள்.