
டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், குறைந்த பட்சம் எட்டு பேராவது இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குப் பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இளைஞர்களை இதற்கு பயன்படுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், இது சம்பந்தமாக காஷ்மீரில் இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி இருப்பது பாதுகாப்புத் துறையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் டெல்லி தலைநகரிலே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது நாடு முழுவதும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டு, தற்போது இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது. டிரம்ப் வந்த பிறகு இந்தியாவின் வளர்ச்சியை தாங்க முடியாமல், எந்தெந்த வகையில், இந்தியாவுக்கு எதிராக செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்து வருகிறார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைகோர்த்தவுடன் இந்த தைரியம் மீண்டும் வருகிறது.

ஒரு பக்கம் உறவாகவும், மறுபக்கம் பாகிஸ்தானுடன் சதியாகவும் இருப்பது, மக்களைப் போன்று நாட்டுத் தலைவர்களும், இப்படி ஆகி விட்டார்களா? இந்தியாவில் தீவிரவாதம் என்பது அன்னிய சக்திகளின் மறைமுக ஆதரவு இங்கே இல்லாமல் நடைபெறாது. முதலில் இவர்களை களை எடுக்க வேண்டும். இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.மேலும்,

இங்கே அரசியல்வாதிகள் ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நாட்டுக்காக அரசியல் செய்யவில்லை. சிறுபான்மை என்று அவர்களுக்கு என்னவோ இவர்கள் வக்காலத்து, பச்சா பாவம் பாக்குறா போல் பேசிக் கொண்டு, பெரும்பான்மை மக்களை முட்டாளாக்கி, அவனவன் அதிகாரத்திற்கு வர வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும். இந்த தீவிரவாத கும்பலுக்கு சிறுபான்மை மக்கள் துணை போகக்கூடாது. அவர்களை யார்? என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் மீது அவர்களுக்கு தேசப்பற்று இருக்க முடியும். தேசப்பற்று இல்லாதவர்கள் இப்போது,
ஏதோ ஒரு கட்சியை பெயர் சொல்லிக் கொண்டு, தொடர்ந்து அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முட்டாளாக்கும் வேலையில் எதிர்க்கட்சிகள் செய்து வருவது, இளைய தலைமுறைகள், அரசியல் தெரிந்தவர்கள், அதை ஏற்றுக் கொள்ள முடியாது.மேலும்,
இளைய தலைமுறைகள், நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் ஆனது? என்பதை உணர வேண்டும். அதன் பிறகு தான் நமக்கு வேலை வாய்ப்பு ,கல்வி ,சுதந்திரம், எல்லாமே ஏனென்றால், இந்த நாட்டின் சுதந்திரம்? என்பது பல ஆண்டுகள் போராடி வாங்கித் தந்து விட்டுப் போனார்கள் .

அவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரம் இன்று அரசியலில் கொள்ளையடிப்பவர்களுக்கு சாதகமாக உள்ளது. குண்டு வெடிப்பு, வன்முறை கலாச்சாரம் ,ஊழல், இது அத்தனையும் இந்த தேசத்திற்கு எதிரானது என்பதை இளைய சமுதாயம் உணர வேண்டும்.மேலும்,
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்து, இந்தப் போராட்டங்களை எல்லாம் அவர்களால் தாங்கி செய்ய முடியுமா? அரசியல் என்பது ஒரு ஆபத்தான போராட்ட களம். அங்கே நல்லவனும் இருப்பான், மிக மோசமானவனும் இருப்பான் ,அப்படித்தான் இந்தியாவின் அரசியல் நிலைமை ஆகிவிட்டது.

மேலும், மறைமுகமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவன் கூட ,தன்னை உத்தமன் என்று தான் பேசிக் கொண்டிருப்பான். இப்படிப்பட்ட அரசியலில் இருந்து மக்கள் எப்படி வாழ வேண்டும்? என்பதை இன்னும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த தேசத்திற்கு ஆபத்தானது.மேலும்,
மக்கள் முதலில் அரசியல் கட்சிகளில் உள்ள அயோக்கியர்கள் ,திருடர்கள், கொள்ளை அடிப்பவர்கள், வஞ்சகர்கள் ,இந்த தேச விரோதிகள் இவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . அவனும் நன்றாக நடிப்பான். உத்தமனாக பேசுவான் .இவர்களுடைய நடிப்பையும், பேச்சையும் பார்த்து தான், இப்போது தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கும், இந்த பதவி ஆசை! ஏனென்றால் இவர்களை விட அவர்கள் அதிலே ஊறிப் போனவர்கள். இப்படிப்பட்ட போலியான அரசியலை தெரிந்து கொள்வதற்கு மக்களிடம் சரியான விளக்கம் தரக்கூடிய ஊடகங்கள் இல்லை.மேலும்,

அதை தெரிந்து கொள்வதற்கு , இப்படிப்பட்ட போலியான அரசியலை படிக்க ஆர்வம் மிக்க உள்ளவர்களாக மக்கள் இருக்க வேண்டும். அரசியலில் உள்ள போலிகளை தெரிந்து கொள்ளவில்லை என்றால், வருங்கால சமுதாயம் நிச்சயம் அவர்களிடம் ஏமாறும். உங்களுடைய எதிர்காலம்? லட்சியம்? எல்லாம் வீணாகிவிடும். இதையெல்லாம் உடனே தெரிந்து கொள்ள முடியாது. பல நாட்கள் இந்த செய்திகளை படித்துக் கொண்டே வர வேண்டும். அப்போதுதான் உண்மைகள் உங்களுக்கு புரியும்.

மேலும்,இந்தியாவில் தேச விரோத சக்திகள் இருப்பதால் தான், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்? இந்த தேச விரோத சக்திகளும் ,அரசியல் கட்சித் தலைவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள். மக்களுக்காக பாடுபடுபவர்களாக பேசுவார்கள்.

இறுதியில் அவர்களுடைய நோக்கம் எதற்கானது? எப்படிப்பட்டது?, நம்மளை ஆள்வதற்காக, அரசியல் அதிகாரத்தை பிடுங்குவதற்காக மட்டும்தான் ,இந்த வேஷங்கள்? என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வீர்கள்? அதற்காக பல ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் , பெயரில் அவர்களுக்கு பின்னால் இருக்கிறது. அவர்களையும் தேசத் தலைவர்களாக காட்டிக் கொண்டிருப்பார்கள். அதுதான் இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம்.மேலும்,

மக்கள் ஏமாறுகிற வரை ,மக்களை ஏமாற்ற அரசியல் கட்சிகள் ,பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், அத்தனையும் துணை போய்க்கொண்டிருக்கிறது.மேலும்,
இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம்? இதற்குப் பின்னால் யார்……..? தீவிரவாதிகளா…….? அரசியல் கட்சிகளா……..? அவர்களுக்கும், இந்த தீவிரவாதிகளுக்கும், மறைமுக தொடர்பா……….?இதுதான் இந்திய மக்களின் கேள்வி………?